News October 7, 2025
தமிழகத்தில் அதிகரித்த டெங்கு காய்ச்சல்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். TN முழுவதும் 10000 டெங்கு ஒழிப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், கொசு உற்பத்தியை தடுக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி முதல் 15,796 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 8 பேர் பலியானதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News October 7, 2025
கரூர் துயரம்: சற்றுமுன் அதிரடி கைது

கரூர் துயர சம்பவத்தில் அவதூறு கருத்து கூறியதாக, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜனை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கரூர் துயர சம்பவ வழக்கில் விஜய் குறித்து ஐகோர்ட் நீதிபதியின் கருத்தை கடுமையாக விமர்சித்து பேசிய அவர், விஜய்க்கு ஆதரவாகவும், ஆளும் திமுக அரசை சாடியும் இருந்தார். இந்நிலையில், அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
News October 7, 2025
தமிழகத்தை சுனாமி தாக்கப் போகிறதா? CLARITY

ஆழ்கடலில் மட்டுமே காணப்படும் டூம்ஸ்டே மீன்கள், கடலின் மேற்பரப்புக்கு வந்தால், அது பேரழிவின் அறிகுறி என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரத்தில் மீனவர்களின் வலையில் இவ்வகை மீன்கள் சிக்கியுள்ளன. 2 மாதங்களுக்கு முன்பும், இவை காணப்பட்டன. இதனால், வங்கக் கடலில் சுனாமி வரப்போகிறதா என அச்சம் எழுந்தது. இந்நிலையில், இதற்கு அறிவியல் ஆதாரமில்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
News October 7, 2025
11,12 வகுப்பு மாணவிகளுக்கு Scholarship; அப்ளை பண்ணுங்க!

CBSE 10-ம் வகுப்பில் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் Single Child-ஆக இருக்கும் மாணவிகளுக்கு 11, 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதத்திற்கு ₹1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. விருப்பமுள்ளவர்கள் அக்.23-ம் தேதிக்குள் <