News June 21, 2024

தமிழக அரசைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

image

திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் ஜூன் 25இல் நடைபெறும் என்று தெரிவித்துள்ள அக்கட்சித் தலைமை, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறு செய்த அனைவர் மீதும் நடிவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.

Similar News

News September 15, 2025

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பம் கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு வழங்கும் டாக்டர். அம்பேத்கர் விருது பெற தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். விருதுக்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் 20-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 15, 2025

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி: ஹரி நாடார்

image

நாடார் மக்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில், நாடார் வேட்பாளர்களை நிறுத்தி, அவர்களுக்காக குரல் கொடுக்கும் நபராக நாங்கள் இருப்போம் என்று ஹரி நாடார் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் சத்திரிய சான்றோர் படை கட்சி தனித்தே நிற்கும் என்ற அவர், கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என கூறியுள்ளார். 2021 தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட அவர், 37,727 வாக்குகள் பெற்றிருந்தார்.

News September 15, 2025

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் இலை

image

நீரிழிவு நோயாளிகள் எப்போதும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேப்பிலை உதவியாக இருக்கும். வேப்பிலையில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வேப்பிலைகள் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் தினமும் 5-10 வேம்பு இலைகளை சாப்பிடுவதால் நல்ல பயன் கிடைக்கும். ஆனால் இந்த இலைகளை மருந்து அல்லது இன்சுலின் அளவிற்கு மாற்றாக கருத முடியாது.

error: Content is protected !!