News May 3, 2024
மின் பயன்பாடு புதிய உச்சம்

தமிழ்நாட்டில் மின் பயன்பாடு 20,830 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வெப்ப அலை வீசிவருவதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் ஃபேன், ஏசியை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, மின்தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்றுவரை மின்தேவை 20,701 மெகாவாட்டாக இந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது.
Similar News
News November 16, 2025
பத்திரிகை சுதந்திரம்: எந்த இடத்தில் இந்தியா?

இன்று (நவ.16) தேசிய பத்திரிகை தினம்! நாட்டின் 4-வது தூணாக கருதப்படுவது பத்திரிகை துறை. ஆனால், நம் நாட்டில் பத்திரிகை துறை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதா என கேட்டால் அதற்கு பதில் சொல்வது சற்று கடினமே. காரணம் உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 151-வது இடத்தில் உள்ளது. இது பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் தீவிரத்தை உணர்த்துகிறது. தொடர்ந்து நார்வே முதலிடத்தில் உள்ளது.
News November 16, 2025
BREAKING:நாளை விடுமுறையா?: கலெக்டர் அறிவிப்பு

<<18303033>>ஆரஞ்சு அலர்ட்<<>> காரணமாக நாளை விடுமுறை அளிக்கப்படுமா என பலரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், திருவாரூர் கலெக்டர் மோகன சந்திரன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அரசு ஊழியர்கள் நாளை விடுமுறை எடுக்காமல், கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், மிக கனமழை அலர்ட் விடுக்கப்பட்ட பிற மாவட்டங்களுக்கும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
News November 16, 2025
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க TIPS

பெற்றோர்களே, உங்கள் குழந்தை 2 நிமிடங்களுக்கு முன் படித்ததை மறந்துவிடுவதால் டென்ஷன் ஆகுதா? அவங்கள திட்டாதீங்க. அவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க சில வழிகள் இருக்கு. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை (முட்டைக்கோஸ், வல்லாரை கீரை, திராட்சை) கொடுங்கள். சரியான உறக்கம், சுறுசுறுப்பான விளையாட்டு ஆகியவற்றை பழக்கப்படுத்துங்கள். புதிய புதிய விஷயங்களை கற்பதும் அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். SHARE.


