News January 24, 2025
டெல்லி: பறக்கும் படை சோதனையில் அதிர்ச்சி

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.20 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 270 உரிமம் இல்லாத ஆயுதங்கள், 44,256 லிட்டர் மதுபானம் மற்றும் ரூ.4.56 கோடி பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த 15 நாட்களில் 504 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 25, 2025
சற்றுமுன்: பிரபல நடிகை கொலை.. காதலன் கைது

‘தி லயன் கிங்’ மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த நடிகை இமானி ஸ்மித்(25) தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்ததாக கூறி காதலன் ஜோர்டான் டி. ஜாக்சன் என்பவரை சற்றுமுன் அமெரிக்க போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நடிகை இமானிக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
News December 25, 2025
EPS-ஐ நேரடியாக சந்தித்தார் பிரேமலதா

அதிமுகவுடனான தேமுதிகவின் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதாக பேசப்படும் நிலையில், EPS-ஐ நேரடியாக சந்தித்திருக்கிறார் பிரேமலதா. ஆனால் இச்சந்திப்பில் அரசியல் பேசவில்லை என கூறிய அவர், குருபூஜைக்கான அழைப்பிதழை வழங்குவதற்காகவே சென்றதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும் ஸ்டாலின் உள்பட பாஜக, காங்., சீமான், விஜய் என அனைவருக்கும் நேரில் அழைப்பிதழை கொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
விஜய் ஒரு சங்கி.. மறைமுகமாக சாடிய கருணாஸ்

சினிமாவில் ₹200 கோடி சம்பளத்தை விடுத்து, ₹2 லட்சம் கோடி சம்பாதிக்கலாம் என அரசியலுக்கு விஜய் வந்துள்ளதாக கருணாஸ் விமர்சித்துள்ளார். விஜய் ஒரு சங்கி என மறைமுகமாக சாடிய கருணாஸ், அவர் எந்த உள்நோக்கத்துடன் வந்திருக்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மக்கள் பிரச்னைகளை களத்தில் சென்று தீர்க்கும் நபரே உண்மையான தலைவன் எனவும் ஓடி ஒளிபவர் தலைவனாக முடியாது என்றும் பேசியுள்ளார்.


