News February 25, 2025
டெல்லி அணிக்கு 128 ரன்கள் இலக்கு

மகளிர் பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரில், டெல்லி அணிக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது குஜராத் அணி. பெங்களூருவில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற DCW அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய GGW அணி, 20 ஓவர்களில் 127/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஃபுல்மாலி 40 ரன்கள் எடுத்தார். DCW தரப்பில் ஷிகா பாண்டே, மரிஜன், அனபெல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
Similar News
News February 26, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News February 26, 2025
ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைத்துவிட்டீர்களா?

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால், ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாததுடன், பெயர் நீக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளது. குறிப்பாக, ரேஷன் கார்டில் பெயர் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்பட வேண்டும். அரசு தரப்பில் வழங்கப்படும் மானியம் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
News February 26, 2025
சிவராத்திரி: பஞ்ச பூத ஸ்தலங்கள்

மகா சிவராத்திரியையொட்டி பஞ்ச பூத சிவ ஸ்தலங்களை சிலர் வழிபடுவதுண்டு. அவை [1] காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் (நிலம்) [2] திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் (நெருப்பு) [3] திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயில் (நீர்) [4] தில்லை நடராஜர் கோயில் (ஆகாயம்) [5] காளஹஸ்தி திருக்காளத்தி கோயில் (காற்று). இந்த கோயில்களில் தரிசனம் செய்தால், சிவன் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.