News March 19, 2024

உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட தலைநகரம் டெல்லி

image

உலகில் அதிக காற்று மாசுயுடைய தலைநகராக டெல்லி இருப்பது தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் IQAir அமைப்பு, 2023ஆம் ஆண்டின் அதிக மாசடைந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா 3வது இடத்தில் உள்ளதென்றும், உலகில் அதிக மாசுயுடைய பெருநகராக பீகாரின் பெகுசராயும், அதிக மாசுயுடைய தலைநகராக டெல்லியும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது

Similar News

News September 7, 2025

அதிமுக பொறுப்பில் இருந்து Ex MP சத்யபாமா நீக்கம்

image

அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து Ex MP சத்யபாமாவை நீக்கி, EPS அறிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைப்பு விவகாரத்தில் ஆரம்பம் முதலே கே.ஏ.செங்கோட்டையனுடன் இருந்து வந்த சத்யபாமா, இன்று காலை, தான் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், EPS சற்றுமுன் அவரை நீக்கியுள்ளார்.

News September 7, 2025

சற்றுமுன்: கட்சியில் ஓபிஎஸ்-ஐ இணைக்க ஏற்பாடு

image

2024 தேர்தலில் தனக்காக அவரது சொந்த தொகுதியை, விட்டு கொடுத்தவர் OPS எனவும், அவருக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்றும் TTV பேசியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனிமரமாக OPS நிற்பதாக, EPS அணியினர் சாடி வருகின்றனர். இந்நிலையில், அமமுகவில் OPS-ஐ இணைத்து அவருக்கு பொதுச்செயலாளர் பதவியை வழங்கும் முடிவை TTV தினகரன் எடுத்துள்ளதாக ஒருதரப்பினர் பேசி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?

News September 7, 2025

‘ஃப்ளட் மூன்’ போது ஏன் நிலவு சிவப்பாக இருக்கிறது?

image

சந்திர கிரகணத்தின்போது, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வந்து, நிழலை நிலவின் மீது படரச் செய்கிறது. சூரிய ஒளி, பூமியின் வளிமண்டலத்தை கடக்கும்போது காற்று மூலக்கூறுகளால் நீலம், ஊதா (குறுகிய அலைநீளம்) ஒளிகள் சிதறிவிடும். ஆனால் சிவப்பு, ஆரஞ்சு ஒளிகள் (நீண்ட அலைநீளம்) வளிமண்டலம் வழியே வளைந்து சென்று நிலவில் படுவதால், நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனை Rayleigh scattering என்பார்கள்.

error: Content is protected !!