News March 19, 2024
உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட தலைநகரம் டெல்லி

உலகில் அதிக காற்று மாசுயுடைய தலைநகராக டெல்லி இருப்பது தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் IQAir அமைப்பு, 2023ஆம் ஆண்டின் அதிக மாசடைந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா 3வது இடத்தில் உள்ளதென்றும், உலகில் அதிக மாசுயுடைய பெருநகராக பீகாரின் பெகுசராயும், அதிக மாசுயுடைய தலைநகராக டெல்லியும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
Similar News
News November 9, 2025
‘How to kill old lady’ யூடியூப் பார்த்து கொலை செய்த மருமகள்!

‘How to kill an old lady’ என யூடியூப்பில் வீடியோ பார்த்து, மருமகள் மாமியாரை கொலை செய்துள்ளார். விசாகப்பட்டினத்தில், கணவரிடம் மாமியார் பொய் சொல்வதை பொறுத்து கொள்ளாத மருமகள், சதித்திட்டம் தீட்டியுள்ளார். வீட்டிலேயே மாமியாரை கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து கொளுத்தியுள்ளார். பூஜை அறையில் விளக்கு தீப்பிடித்து மாமியார் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய நிலையில், விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது.
News November 9, 2025
மருத்துவமனையில் பிரபல நடிகர்.. வீட்டில் பதற்றம்

சென்னையில் உள்ள நடிகர் அருள்நிதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் அருள்நிதி, ஹாஸ்பிடலில் ஓய்வில் இருக்கிறார். CM ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டலால் வீட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
News November 9, 2025
ஒருபக்கம் மாசு, ஒருபக்கம் குளிர்: தவிக்கும் தலைநகர்

டெல்லியில் காற்று மாசு தீவிரமடைந்து, ஒவ்வொரு நாளும் தரக்குறியீடு மோசமாகவே பதிவாகிறது. இந்நிலையில், வடமேற்கு காற்றின் தாக்கத்தால் தலைநகரில் குளிர் அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 11°C ஆக பதிவாகியுள்ள நிலையில், அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு குளிர் மேலும் அதிகரிக்கும் என IMD கணித்துள்ளது. ஒரு பக்கம் காற்று மாசு, மறுபக்கம் குளிர் என டெல்லி மக்கள் தவித்து வருகின்றனர்.


