News March 19, 2024
உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட தலைநகரம் டெல்லி

உலகில் அதிக காற்று மாசுயுடைய தலைநகராக டெல்லி இருப்பது தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் IQAir அமைப்பு, 2023ஆம் ஆண்டின் அதிக மாசடைந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா 3வது இடத்தில் உள்ளதென்றும், உலகில் அதிக மாசுயுடைய பெருநகராக பீகாரின் பெகுசராயும், அதிக மாசுயுடைய தலைநகராக டெல்லியும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
Similar News
News November 14, 2025
ஜெயலலிதா வாட்ச் கலெக்ஷன் PHOTOS

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வலிமையான, தைரியமான பெண் அரசியல் தலைவர்களில் ஒருவர். தலைமை பண்பில் சிறந்து விளங்கியவர், வாட்ச் பிரியராகவும் இருந்துள்ளார். அவரிடம் ஏராளமான வாட்ச் கலெக்ஷன் இருந்துள்ளது. அதில், அவர் அணிந்திருந்த சில பிரபல வாட்ச்களை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
News November 14, 2025
அடுத்தடுத்து ஹிட் அடிப்பாரா சிவகார்த்திகேயன்?

‘SK24′ பட ஷூட்டிங் டிசம்பர் 2-வது வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபி சக்கரவர்த்தி இயக்கும் இப்படத்தில், ‘பராசக்தி’-க்கு (SK25) பிறகு ஸ்ரீலீலா, SK உடன் இணைந்து ஹீரோயினாக நடிக்கவுள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம் பக்கா கமர்ஷியலாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், வெங்கட்பிரபு இயக்கும் ‘SK26′ படத்தின் கதையும் சிவாவுக்கு நன்றாக அமையும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
News November 14, 2025
ஊழல் வழக்கில் அம்பானி: மும்பை HC நோட்டீஸ்

இந்தியாவின் டாப் பணக்காரரான முகேஷ் அம்பானி ஊழல் வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளார். கிருஷ்ணா கோதாவரி படுகையில், ₹12,000 கோடி மதிப்புள்ள ONGC எரிவாயுவை சட்டவிரோதமாக அம்பானி திருடியதாக கூறி, கிரிமினல் வழக்குப்பதியவும், சிபிஐ விசாரணை கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த மும்பை HC, சிபிஐ மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், நவ.18-ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


