News March 19, 2024
உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட தலைநகரம் டெல்லி

உலகில் அதிக காற்று மாசுயுடைய தலைநகராக டெல்லி இருப்பது தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் IQAir அமைப்பு, 2023ஆம் ஆண்டின் அதிக மாசடைந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா 3வது இடத்தில் உள்ளதென்றும், உலகில் அதிக மாசுயுடைய பெருநகராக பீகாரின் பெகுசராயும், அதிக மாசுயுடைய தலைநகராக டெல்லியும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
Similar News
News November 9, 2025
நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு

முறையாக பள்ளிக்கு வரும் +2 மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு எழுத <<18239237>>ஹால் டிக்கெட்<<>> வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், பொதுத்தேர்வு குறித்த மாணவர்களின் அச்சத்தை போக்க ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும், தேர்ச்சி பெற முடியாதோ என நினைக்கும் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பள்ளிகளில் அதற்கான பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 9, 2025
ரஜினி, அஜித் சம்பளத்துக்கு வருகிறது கட்டுப்பாடு

இனி படங்களின் லாப நஷ்டங்களில் நடிகர்களுக்கு பங்கு உண்டு என தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு படம் நஷ்டமானால், அந்த பாரத்தை தயாரிப்பு நிறுவனம் மட்டுமே தாங்கவேண்டிய சூழல் இருக்காது. ஒருவேளை வசூலை குவித்தால் நடிகர்களும் லாபம் பார்க்கலாம். மேலும், நடிகர்கள் வெப் சீரிஸ்களை தவிர்த்து திரைப்படங்களின் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News November 9, 2025
சற்றுமுன்: பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் Iwate மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK தெரிவித்துள்ளது. Iwate மாகாணத்தின் கடலோரத்திலிருந்து 70 கி.மீ., தொலைவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி உருவாகியுள்ளதாகவும், அது விரைவில் பசிபிக் கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாகவும் NHK கூறியுள்ளது. அலையின் உயரம் சுமார் 3 அடி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


