News February 8, 2025
டெல்லி ஒரு மினி இந்தியா: மோடி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_122024/1734619656431_347-normal-WIFI.webp)
டெல்லி தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அரசியலில் பொய்கள் எடுபடாது என்று அவர் ஆம் ஆத்மியை சாடினார். டெல்லி ஒரு மினி இந்தியா என்றும் அதில் மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் பாஜகவை அங்கீகரித்திருப்பதாக அவர் பேசினார். இனி டெல்லியில் டபுள் எஞ்சின் ஆட்சி என்றும் அவர் பெருமைப்பட தெரிவித்தார்.
Similar News
News February 8, 2025
தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737259579317_1246-normal-WIFI.webp)
தைப்பூசம் தினமான பிப்ரவரி 11ஆம் தேதி அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசம் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று 2021ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் EPS சட்டம் இயற்றினார். அதன்படி, இந்தாண்டு வரும் செவ்வாய்க்கிழமை விடுமுறை வருகிறது. திங்கட்கிழமை விடுப்பு எடுத்து வார இறுதியுடன் தொடர் விடுமுறையை கொண்டாட சம்பளதாரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
News February 8, 2025
உங்கள் மூளையை பாதிக்கும் தவறான 7 பழக்கங்கள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739029749667_347-normal-WIFI.webp)
உடலின் மிக முக்கிய உறுப்பு மூளை. ஆரோக்கியமான டயட், உடற்பயிற்சிகள் மூலம் அதை ஆரோக்கியமாக வைக்கலாம். ஆனால், பின்வரும் பழக்கங்கள் மூளையை சேதப்படுத்தி அதன் வேலைகளை பாதிக்கும். அவை: *நாட்பட்ட மன அழுத்தம் *போதுமான தூக்கம் இல்லாதது *புகைப்பழக்கம் *அதிகம் இனிப்பு உட்கொள்வது *அதிக மதுப்பழக்கம் *உடலுழைப்பு இல்லாத லைஃப்ஸ்டைல். இவற்றை தவிர்த்தாலே, மூளை நன்றாக வேலை செய்யும் என்கின்றனர் மருத்துவர்கள்.
News February 8, 2025
3.99 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738977720328_55-normal-WIFI.webp)
பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவித் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 3.99 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்று கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சர் தோகன் சாகு பதிலளித்துள்ளார். ஜன.30 வரை நாடு முழுவதும் 68 லட்சத்து 2 ஆயிரம் பேர் வியாபாரிகளுக்கான கடன் பெற்றுள்ளனர். பிரதமர் சுவநிதி திட்டம் மூலம் நேரடியாக பயனாளர்கள் வங்கிக் கணக்கில் கடன்தொகை செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.