News March 25, 2025
டெல்லிக்கு ₹1 லட்சம் கோடிக்கு பட்ஜெட்!

டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்த நிலையில், முதல் முறையாக அம்மாநில பேரவையில் CM ரேகா குப்தா நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுமார் ₹1 லட்சம் கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், டெல்லியில் நீடித்திருந்த ஊழல் மற்றும் திறனற்ற சகாப்தம் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறினார். கடந்த நிதியாண்டில் தாக்கல் செய்த பட்ஜெட்டை விட, இது 31.5% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 26, 2025
விலையை உயர்த்தக்கூடாது: அமைச்சர் எச்சரிக்கை!

ஜல்லி, எம்சாண்ட் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய அவர், கிரஷர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தி வருவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக கூறினார். தன்னிச்சையாக விலையை உயர்த்தினால் சம்பந்தப்பட்ட கிரஷர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
News March 26, 2025
‘நேக்குப் போக்குடன்’ பதில் சொல்வது ஏன்? துரைமுருகன்

அத்திக்கடவு – அவிநாசி 2ஆம் கட்ட திட்டம் குறித்த கேள்விக்கு, பேரவையில் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டால், உறுதி செய்வது போல் ஆகிவிடும். அதனால்தான் ‘நேக்குப் போக்குடன்’ பதில் சொல்கிறோம் என்று துரைமுருகன் பதிலளித்துள்ளார். ஒரு திட்டத்தை செய்வதாக இருந்தால் கூட, செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவதற்கு காரணம் இதுதான். MLAக்கள் அதை புரிந்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
News March 26, 2025
பாஜக – அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு: விஜயதாரணி

அமித்ஷா – இபிஎஸ் சந்திப்பு குறித்து பேசிய பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான விஜயதாரணி, 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து போட்டியிட்டால், மாற்றம் ஏற்படும் எனக் கூறிய அவர், தவெக தலைவர் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் ( பாஜக, அதிமுக உடன்) ஆளும் அரசில் இடம்பெறுவார் எனவும் தெரிவித்தார்.