News February 16, 2025
டெல்லி நெரிசல்: பயத்தில் பயணிகள்…

டெல்லி ரயில் நிலையத்தில் சமாளிக்க முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் மிரட்சியுடன் தெரிவிக்கின்றனர். கும்பமேளாவுக்காக பிஹாரின் சாப்ராவில் இருந்து ரயில் ஏற வந்த ஒரு பயணி, தாயை இழந்துள்ளார். தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மூச்சுத் திணறி பலர் மயங்கியதாக அந்த பயணி கண்ணீர்விட்டபடி கூறினார். ரயில்கள் தாமதமும் நெரிசலுக்கு காரணம் என்கிறார் மற்றொரு பயணி.
Similar News
News January 1, 2026
திமுகவுக்கு பெரும் நிம்மதி

பிரவீன் சக்ரவர்த்தி கிளப்பிய சர்ச்சையால் DMK-CONG கூட்டணியில் பிளவு ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் கருதினர். காங்., தவெக இடையே பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், செல்வப்பெருந்தகை கூட்டணி வலுவாக இருப்பதாக சொல்லிவிட்டார். <<18722641>>ப. சிதம்பரமும் <<>>திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், திமுக தலைமை நிம்மதியடைந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 1, 2026
பொங்கல் பரிசு… அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க TN அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக ₹248 கோடி ஒதுக்கியுள்ள அரசு, 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, ஒரு கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையடுத்து, ஒரு சில நாள்களில் ₹3,000 ரொக்கப் பணம் குறித்த அறிவிப்பையும் CM ஸ்டாலின் வெளியிடுவார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 1, 2026
ஆபரேஷன் சிந்தூர்.. இந்தியா பெருமிதம்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த சான்று என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், இந்திய படைகள் திறம்பட செயல்பட்டு PAK-ன் தீவிரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்ற செய்தியை உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் சொல்லியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


