News February 16, 2025

டெல்லி நெரிசல்: பயத்தில் பயணிகள்…

image

டெல்லி ரயில் நிலையத்தில் சமாளிக்க முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் மிரட்சியுடன் தெரிவிக்கின்றனர். கும்பமேளாவுக்காக பிஹாரின் சாப்ராவில் இருந்து ரயில் ஏற வந்த ஒரு பயணி, தாயை இழந்துள்ளார். தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மூச்சுத் திணறி பலர் மயங்கியதாக அந்த பயணி கண்ணீர்விட்டபடி கூறினார். ரயில்கள் தாமதமும் நெரிசலுக்கு காரணம் என்கிறார் மற்றொரு பயணி.

Similar News

News November 2, 2025

140 நாள்கள் மட்டுமே திமுக ஆட்சி: நயினார்

image

விவசாயிகள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அதைபற்றி எல்லாம் CM ஸ்டாலின் கவலைப்படுவதில்லை என நயினார் சாடியுள்ளார். விவசாயிகள் மீது அக்கறை இல்லாத திமுக ஆட்சி முடிவதற்கு இன்னும் 140 நாள்கள் மட்டுமே இருக்கிறது. அதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கிவிட்டதாக தெரிவித்தார். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ₹30,000 நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

News November 2, 2025

‘ஜூனியர் மாதம்பட்டி’ போட்டோ வெளியிட்ட ஜாய் கிரஸில்டா!

image

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக வழக்கு தொடர்ந்துள்ள ஜாய் கிரஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், ‘Carbon copy of his father face’ என கிரிஸில்டா இன்ஸ்டாவில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். அதாவது, அப்பாவின் முக ஜாடையில் அப்படியே குழந்தை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, மாதம் ₹6.5 லட்சம் பராமாரிப்பு தொகையை கிரிஸில்டா கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 2, 2025

சனி பகவானின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்க..

image

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில பொருள்களை வைக்கக்கூடாது. ➤துருப்பிடித்த பொருள்களை தூக்கி எரியுங்கள் ➤வீட்டின் மாடியை அழுக்காக வைத்திருக்க வேண்டாம் ➤பழைய பொருள்களை, அழுக்கான பொருட்களை வீட்டிற்குள் வைக்காதீங்க. இவற்றை வைத்திருந்தால் சனி பகவானின் கோபத்துக்கு ஆளாவீர்கள் எனவும், வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் உருவாகும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

error: Content is protected !!