News August 18, 2024

சதுர்த்தசியில் வழிபட வேண்டிய தெய்வம்!

image

ஆவணி சதுர்த்தசியில் (இன்று) ஆதிசக்தி அம்சமாகிய ஸ்ரீ அதர்வண பத்ரகாளிக்கு விரதமிருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அசுரகுரு சுக்ராச்சாரியார் வழிபட்ட சேலம் உக்ரபிரத்தியங்கிரா கோயிலுக்கு விரதமிருந்துச் சென்று, மிளகாய் அபிஷேகம் செய்து, ரோஜாப்பூ மாலையிட்டு, பூசணி விளக்கேற்றி, வெண்பொங்கல் படையலிட்டு, 108 சக்தி போற்றி சொல்லி வணங்கினால் வேண்டிய வரங்கள் யாவும் கிட்டும் என்பது ஐதீகம்.

Similar News

News November 28, 2025

புயல் அலர்ட்: 10 மாவட்டங்களில் அடைமழை வெளுக்கும்

image

டிட்வா புயல் எதிரொலியாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு CM ஸ்டாலினும் அறிவுறுத்தியுள்ளார். ஆகையால், பாதுகாப்பாக இருங்கள் மக்களே!

News November 28, 2025

இந்தியாவின் GDP தரவுகளுக்கு ‘C’ கிரேடு: IMF

image

IMF மதிப்பாய்வில், இந்தியாவின் GDP தரவுகளுக்கு ‘C’ கிரேடு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார கணக்குகள் எவ்வளவு துல்லியமாக உள்ளன என்பதை பொறுத்து, இந்த கிரேடுகள் (A- சிறப்பு, B-போதுமானது, C-தரம் குறைவு, D-போதுமானதாக இல்லை) வழங்கப்படுகின்றன. இந்த கிரேடு காரணமாக, உலகளவில் நாட்டின் நம்பகத்தன்மையில் கேள்வி எழும் என்றும், முதலீடுகள் பாதிக்கப்படலாம் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

News November 28, 2025

சமயலறை சாதி கொடூரம்: 6 பேர் குற்றவாளிகள்

image

திருப்பூர் அருகே 2018-ல் அரசுப்பள்ளியில் பட்டியலின பெண் உணவு சமைப்பதற்கு ஊர் மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பெண்ணுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சாதிய வன்கொடுமை தொடர்பான வழக்கில், 36 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 7 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கில் தொடர்புடைய 4 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் விடுவிக்கப்பட்டனர்.

error: Content is protected !!