News June 27, 2024
தமிழ்நாட்டில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள்

தமிழ்நாடு, உ.பி.,யில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன என்று ஜனாதிபதி முர்மு தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்புத்துறை சார்ந்த ஏற்றுமதிகள் அதிகரித்து வருவதாக பெருமிதத்துடன் கூறிய அவர், ஆயுதம் ஏற்றுமதி செய்யும் உலகின் முதல் 25 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது என்றார். அத்துடன், 2028-29 இல் பாதுகாப்பு ஏற்றுமதி ₹50,000 கோடியை எட்டும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News August 20, 2025
121 கிலோ தங்கம்… கடவுளுக்கு காணிக்கை கொடுத்த பக்தர்

திருப்பதி ஏழுமலையானுக்கு ₹140 கோடி மதிப்பு கொண்ட 121 கிலோ தங்கத்தை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். ஏழுமலையானை வேண்டிக் கொண்டு தொழில் தொடங்கிய இவர், கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துள்ளார். இதையடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக கொடுத்திருக்கிறார். பெயர் சொல்ல விரும்பாத அந்த பக்தருக்கு சொந்தமான நிறுவனத்தின் 60% பங்குகள் மட்டும் ரூ.6,000 கோடியாம்.
News August 20, 2025
BREAKING: ரோட்டிலேயே செல்லும் விஜய்

தவெக 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜய் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக மதுரைக்கு புறப்பட்டுள்ளார். எப்போதும் தனி விமானத்தில் பயணிக்கும் விஜய், தற்போது சாலை வழியாக செல்வதால் வழியில் மக்களைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் தவெக நிர்வாகிகள் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர்.
News August 20, 2025
ஆன்லைன் கேமிங் தடை மசோதா தாக்கலானது

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கு தடை விதிக்கும் <<17454534>>புதிய மசோதா<<>> லோக் சபாவில் தாக்கலானது. இனி ஆன்லைன் பெட்டிங் கேம் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டு சிறை, ₹1 கோடி அபராதம்; விளம்பரம் செய்தால் 2 ஆண்டு சிறை, ₹50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். புதிதாக உருவாக்கப்படும் National Online gaming Commission, விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும். இந்த சட்டத்தை நீங்கள் வரவேற்கிறீர்களா?