News May 15, 2024
ஊழல் குற்றச்சாட்டில் பாதுகாப்பு துறை இயக்குநர் கைது

ரஷ்ய பாதுகாப்பு துறையில் இயக்குநரக தலைவராக பணியாற்றிவரும் லெப். ஜெனரல் யூரி குஸ்னெட்சோவ். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த பதவி வகித்து வரும் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதன் பேரில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதற்கிடையே அவரது வீடு & தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ₹8 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News December 1, 2025
தி.மலை: தலைகுப்புற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!

கலசபாக்கம் வட்டம் தென் பள்ளிப்பட்டு அருகே சாலையில் வாகனத்தை முந்த முயன்ற ஆந்திரா காரின் மீது மோதாமல் இருக்க ஒதுங்கிய அரசு பேருந்து நிலை தடுமாறி சாலை ஓரம் கவிழ்ந்தது. பேருந்தில் பயணிகள் குறைவாக இருந்ததால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், பேருந்தை மீட்க வந்த கிரேனும் கவிழ்ந்ததால், கூடுதல் கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பேருந்தும் கிரேனும் மீட்கப்பட்டது.
News December 1, 2025
Sports 360°: கால்பந்தில் கலக்கும் இந்தியா

*U-17 ஆசிய கோப்பை கால்பந்து குவாலிஃபையர் போட்டியில் IND 2-1 என்ற கோல் கணக்கில் IRN-ஐ வீழ்த்தியது. *சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியின் இறுதிப்போட்டியில் பெல்ஜியத்திடம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி. *ITTF யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் திவ்யான்ஷி வெண்கலம் வென்றார். *சையத் மோடி பேட்மிண்டன், மகளிர் இரட்டையரில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த் & த்ரிஷா ஜோலி இணை சாம்பியன்.
News December 1, 2025
டிட்வா புயல்.. இன்று கனமழை பொழியுமா?

டிட்வா புயல் கரையை கடக்காமல், கடலோரப்பகுதிகள் வழியாக சென்று வலுவிழந்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை அல்லது நெல்லூர் அருகே தாழ்வு மண்டலமாகவோ, தாழ்வுப்பகுதியாகவோ இன்று நிலைகொள்ள வாய்ப்புள்ளது. அவ்வாறு நிலைகொண்டால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழைக்கான சூழல் ஏற்படும். அதன் பிறகு மீண்டும் கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளை நோக்கி வந்து, ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.


