News May 15, 2024

ஊழல் குற்றச்சாட்டில் பாதுகாப்பு துறை இயக்குநர் கைது

image

ரஷ்ய பாதுகாப்பு துறையில் இயக்குநரக தலைவராக பணியாற்றிவரும் லெப். ஜெனரல் யூரி குஸ்னெட்சோவ். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த பதவி வகித்து வரும் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதன் பேரில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதற்கிடையே அவரது வீடு & தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ₹8 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News November 15, 2025

கடலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

கடலூர், சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவர் கடந்த 2022 வீட்டில் தனியாக இருந்த மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததால், அப்பெண் கற்பமடைந்தார். பெண்ணின் தாய் நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வழக்கு பதிவு செய்து கடலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதில், நேற்று மணிகண்டனுக்கு 10ஆண்டு சிறை தண்டனை அளித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு வழங்கினார்.

News November 15, 2025

பிஹார் வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு: வேல்முருகன்

image

உண்மையான பிஹார் மக்கள் ஓட்டுப்போட்டா பாஜகவினர் வெற்றி பெற்றார்கள் என தவாக வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியலில் என்ன தில்லுமுல்லு நடந்திருக்கிறது என்பதை விசாரிக்க வேண்டும் என்ற அவர், இதையே TN-லும் செய்ய பாஜக திட்டமிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், TN-ல் உள்ள வட இந்தியர்களுக்கு Voter ID கொடுத்ததன் மூலம், பகுத்தறிவாளிகள் வெல்ல முடியாத சூழல் உருவாகும் எனவும் கூறினார்.

News November 15, 2025

ECI திருடனாக மாறிவிட்டது: ஆ.ராசா

image

பிஹாரில் NDA கூட்டணியின் வெற்றிக்கு, ECI-யின் SIR பணிகள் மறைமுகமாக உதவியதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், SIR மூலம் ECI திருடனாக மாறிவிட்டது என்று MP ஆ.ராசா விமர்சித்துள்ளார். ECI-ஐ திருடர்களிடம் இருந்து பாதுகாக்க, ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் போராட வேண்டி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!