News January 31, 2025
டிஎஸ்பி ஆனார் தீப்தி சர்மா

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக உ.பி மாநிலம் மொராதாபாத் துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானாவில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட முகமது சிராஜுக்குப் பிறகு, இந்த கவுரவத்தை பெறும் 2-வது இந்திய கிரிக்கெட்டர் என்ற பெருமையை தீப்தி சர்மா பெற்றுள்ளார்.
Similar News
News September 2, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News September 2, 2025
ஆகஸ்ட்டில் ₹1.86 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

ஆகஸ்ட் மாதத்தில் ₹1.86 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது 2024-ம் ஆண்டு ஆகஸ்ட்டை விட(₹1.75 லட்சம் கோடி) 6% அதிகமாகும். தமிழகத்தை கணக்கிட்டால் கடந்த ஆண்டை விட 9% அதிகம் வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி வருவாயில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன. தீபாவளியன்று ஜிஎஸ்டி குறைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
News September 2, 2025
தினமும் லேட்டாக தூங்குபவரா நீங்கள்?

தினமும் இரவில் யூடியூப், வெப்சீரிஸ், ரீல்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு லேட்டாக தூங்குபவரா நீங்கள்? இத கவனிங்க. நள்ளிரவு 1 மணிக்கு மேல் தூங்கச் செல்பவர்களுக்கு மனநலப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 20-40% அதிகம் என்கிறது ஸ்டான்போர்ட் பல்கலை., ஆய்வு. நீங்கள் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பதைவிட, எத்தனை மணிக்கு தூங்கப் போகிறீர்கள் என்பதே உங்கள் மனநலத்தை தீர்மானிக்கிறதாம். ஆகவே, நேரத்துக்கு தூங்குங்க.