News August 3, 2024
காலிறுதிக்கு முன்னேறினார் தீபிகா

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனி வீராங்கனை மிக்சல் க்ரோப்பனை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அவர் அசத்தியுள்ளார். தொடர்ந்து, மகளிர் ஒற்றையர் வில்வித்தை காலிறுதி போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.
Similar News
News December 23, 2025
₹100 கோடி பரிசு அறிவித்த சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவைச் சேர்ந்த யாராவது ஒருவர் குவாண்டம் அறிவியலுக்காக நோபல் பரிசு வென்றால் அவர்களுக்கு ₹100 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அம்மாநில CM சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அமராவதி வேலியில் இன்று Quantum Talk by CM CBN என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற சந்திரபாபு, குவாண்டம் மற்றும் அது தொடர்பான துறைகளில் நிபுணர்களை உருவாக்க ஒரு செயல் திட்டத்தைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
News December 23, 2025
‘ஜனநாயகன்’ Vs ‘பராசக்தி’: யாருக்கு அதிக திரைகள்?

ஜனநாயகனும், பராசக்தியும் அடுத்தடுத்த நாள்களில் வெளியாவதால், திரையரங்குகள் யாருக்கு அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலுள்ள 1100-க்கும் அதிகமான திரைகளில் 45% பராசக்திக்கும், 55 % ஜனநாயகனுக்கும் கிடைக்கும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், ஒரே சமயத்தில் 2 பெரிய படங்கள் வருவதால் ஜனநாயகனுக்கும் வசூலில் சரிவு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
News December 23, 2025
5 மணிநேரத்துக்கு கம்மியா தூங்குறீங்களா.. உஷார்!

ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் ★ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு அதிகரித்து மாரடைப்பு, பக்கவாதம் வரலாம் ★நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து புற்றுநோய் வரும் வாய்ப்பு ஏற்படலாம் ★டைப் 2 நீரிழிவு வரலாம் ★குறைவான தூக்கத்தால் பசியை கட்டுப்படுத்தும் லெப்டின் & கிரெடின் ஹார்மோன்கள் சமநிலையை இழக்கும். இதனால் அதிக பசி ஏற்பட்டு, உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, நல்லா தூங்குங்க!


