News August 3, 2024
காலிறுதிக்கு முன்னேறினார் தீபிகா

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனி வீராங்கனை மிக்சல் க்ரோப்பனை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அவர் அசத்தியுள்ளார். தொடர்ந்து, மகளிர் ஒற்றையர் வில்வித்தை காலிறுதி போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.
Similar News
News December 7, 2025
பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்

ஏர்டெல்லின் குறைந்த விலை ₹181 Data பிளான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ₹195 பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ₹195-ல் 12GB Data + JioHotstar உள்பட 20 OTT-க்கான 1 மாத Subscription கிடைக்கும். முன்னதாக, ₹181 ரீசார்ஜ் பிளானில் 30 நாளுக்கான 15GB Data வழங்கியதோடு 20 OTT Subscription-ஐ ஏர்டெல் இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
News December 7, 2025
வங்கிகளில் ₹78,000 கோடி உரிமை கோரப்படவில்லை: PM

நாட்டின் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் ₹78,000 கோடி உள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பணம் என்று குறிப்பிட்ட அவர், அப்பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க அரசு முயற்சி எடுத்து வருவதாக கூறியுள்ளார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் பேசியுள்ளார்.
News December 7, 2025
அத்திவரதரை போல 3 நாள்களே காட்சி தரும் சுயம்புலிங்கம்!

சென்னை திருவொற்றியூர் தியாகராஜசாமி- வடிவுடையம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஒருமுறை மட்டும் ஆதிபுரீஸ்வரர் நாககவசம் திறப்பு விழா நடைபெறுகிறது. கார்த்திகை பெளர்ணமியை முன்னிட்டு, 3 நாள்கள் இயற்கையாக உருவான சிவலிங்கமான ஆதிபுரீஸ்வரர், எந்த அலங்காரமும் இன்றி காட்சியளிக்கிறார். இதுவே இக்கோவிலின் தனிசிறப்பு என பக்தர்கள் நம்புகின்றனர். கடந்த 4-ம் தேதி முதல் ஆதிபுரீஸ்வரரை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.


