News November 12, 2024
ஐபிஎல் ஏலம் குறித்து மனம் திறந்த தீபக் சாகர்!

IPL மெகா ஏலம் குறித்து தீபக் சாகர் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர், ’கடைசியாக நடைபெற்ற மெகா ஏலத்தில் CSK அணி என்னை தக்க வைக்கவில்லை. ஆனால் ஏலத்தில் என்னை மீண்டும் எடுத்தனர். அதனால் 2025 IPL தொடருக்கான மெகா ஏலத்திலும் சிஎஸ்கே நிர்வாகம் என்னை ஏலம் எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார். பவர் ப்ளே ஸ்பெஷலிஸ்ட் ஆன தீபக் சாகரை CSK அணி மீண்டும் ஏலத்தில் எடுக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News August 13, 2025
எத்தனால் கலப்பு பெட்ரோலால் பாதிப்பு இல்லை: மத்திய அரசு

எத்தனால் கலந்த பெட்ரோலால் வண்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பால் 30% கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதாகவும், எத்தனால் கலப்பு பெட்ரோலால் வண்டிகள் பழுதடைவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும், ஓட்டும் விதம், பராமரிப்பு உள்ளிட்ட காரணிகள் தான் வண்டியின் மைலேஜை தீர்மானிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
News August 13, 2025
திமுக ஆட்சியை அகற்றும் நேரம் வந்துவிட்டது: கி.சாமி

கவின் ஆணவக்கொலையால் தமிழகத்திற்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. திமுக, அவர்களது கொள்கையை விட்டு வெகுதூரம் சென்று விட்டது என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். டாஸ்மாக்கை திறந்து வைத்து விட்டு, உங்களுடன் ஸ்டாலின் என்பது ஏமாற்று வேலை. திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்தார். இதன் மூலம், திமுக கூட்டணியில் புதிய தமிழகம் இணையாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.
News August 13, 2025
SPORTS ROUNDUP: மகளிர் ODI WC.. பெங்களூருவில் இருந்து மாற்றம்

◆சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அனிசிமோவா(USA) & ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிட்சிபாஸ்(கிரீஸ்) ஆகியோர் அதிர்ச்சி தோல்வி.
◆2-வது T20: 53 ரன்கள் வித்தியாசத்தில் SA வெற்றி. முதலில் ஆடிய SA 20 ஓவர்களில் 218/7, AUS 17.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்.
◆மகளிர் ODI WC: பெங்களுரூவில் நடக்கவிருந்த அனைத்து போட்டிகளும் வேறு மைதானத்திற்கு மாற்றப்படுவதாக தகவல்.