News May 27, 2024
சேகுவேரா புத்தகங்களுடன் தீபக் ராஜா உடல் அடக்கம்

நெல்லையில் கடந்த வாரம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை 7 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். ஆயிரக்கணக்கான கிராம மக்கள் புடை சூழ, சுமார் 4 மணி நேரமாக அவரது சொந்த ஊராக மூன்றடைப்புக்கு உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு, ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களின் புத்தகங்கள் வைத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Similar News
News November 26, 2025
சற்றுநேரத்தில் புயல்: இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

இன்னும் சற்றுநேரத்தில் ( மதியத்திற்குள்) ‘சென்யார்’ புயல் உருவாகவுள்ளதால், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. அதேநேரம் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News November 26, 2025
ஜனநாயகன் டிரெய்லர் எப்போது?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டிரெய்லர் புத்தாண்டு தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி, ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஜன.9-ல் பொங்கல் ரிலீஸாக களம் காணவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிச.27-ல் மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் அனுராதா ஸ்ரீராம், ஆண்ட்ரியா, சைந்தவி உள்ளிட்ட பல முன்னணி பாடகர்களும் பங்கேற்கின்றனர்.
News November 26, 2025
பகட்டான கொண்டாட்டங்களை விரும்புவதில்லை: உதயநிதி

DCM உதயநிதி ஸ்டாலின், நாளை (நவ.27) தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், பகட்டான கொண்டாட்டங்களை தான் விரும்புவதில்லை என்ற உதயநிதி, தன்னுடைய பிறந்தநாளில், கொள்கை பணியும் மக்கள் பணியும் இணைந்து இருந்தாலே தனக்கு மனநிறைவை தரும் என்றும் கூறியுள்ளார். எனவே, மாநிலம் முழுவதும் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.


