News March 28, 2024
முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

ஈரோடு எம்.பி கணேசமூர்த்தியின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர் கணேசமூர்த்தி என்பதை நினைவுகூர்ந்த முதல்வர், அவரது மறைவு செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக உருக்கமாக கூறியுள்ளார். மேலும், அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
Ombrophobia: மழையை பார்த்து பயப்படும் மனிதர்கள்

மழையை பார்த்தால் சிலருக்கு அச்சம் ஏற்படும். அதுவே Ombrophobia எனப்படுகிறது. இது பொதுவாக இளம் பருவத்தினர், குழந்தைகளிடையே காணப்படுகிறது. மழை பெய்யும் என செய்திகள் வெளியானால், அன்று எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் வெளியில் செல்ல மாட்டார்கள். படபடப்பு, நடுக்கம், பயம், மார்பு வலி, தலைச்சுற்றல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இதற்கான சிகிச்சை எதுவும் இல்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.
News October 21, 2025
அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்: நயினார்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மக்கள், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். இந்த முக்கியமான தருணத்தில், வெறும் காணொலி கூட்டங்களோடு நிறுத்திவிடாது, போர்க்கால அடிப்படையில் போதிய முன்னேற்பாடுகளை செய்யவும் அவர் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், மீட்பு பணிகளில் அரசுடன் இணைந்து பாஜக உறுதுணையாக களப்பணியாற்றும் என்றும் உறுதியளித்துள்ளார்.
News October 21, 2025
உங்க மூஞ்சில Barber கோடு போட்டுட்டா?

கடையில் ஷேவ் பண்ணும் போது பார்பர் முகத்தில் கோடு போட்டுட்டா, நஷ்ட ஈடு வாங்கலாம் தெரியுமா? இதுக்கு பேரு ‘Deficiency of service’. அதாவது, தொழிலில் குறைபாடு. இப்படி கோடு விழுந்தால், Influencer-கள், யூடியூபர்கள் போன்றோர் பிஸினஸை இழக்கலாம். வழக்கு தொடர்ந்தால் வழக்கின் செலவு உள்பட நஷ்ட ஈடு கிடைக்கலாம். இதற்கு வீடியோ ஆதாரம் & இந்த பாதிப்பால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது போன்ற தகவல்களை சேகரிக்கவும்.