News February 28, 2025
அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு: அரசு

மார்ச் மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. மக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் வருவாய் பெருக்கும் நோக்கிலும் மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆவண பதிவினை ஏற்பதற்கு ஏதுவாக அனைத்து பதிவு அலுவலகங்களும் காலை 10 மணி முதல் ஆவண பதிவு முடியும் வரை செயல்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.
Similar News
News February 28, 2025
IND உடன் மோதும் அணிகளுக்கு தான் அழுத்தம்: SA வீரர்

CTயில் IND உடன் செமி ஃபைனல், ஃபைனல் மோத உள்ள அணிகளுக்கு அதிக அழுத்தம் இருக்கும் என SA வீரர் ரஸ்ஸி வான்டெர் டூசன் தெரிவித்துள்ளார். ஒரே இடத்தில் பயிற்சி செய்து, விளையாடுவது INDக்கு மிக சாதகமான ஒன்று எனவும், இதனால் அந்த மைதானத்தை அணியால் முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதை புரிந்து கொள்வதற்கு ராக்கெட் டெக்னாலஜி அறிவு தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News February 28, 2025
நாட்டு மக்கள் தவிக்கும் போது.. கனிமொழி சாடல்

நாட்டில் 100 கோடி மக்கள் போதிய வருமானமின்றி தவிக்கும் செய்தியை மடைமாற்ற முயல்வதாக பாஜகவையும், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் டேக் செய்து கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார். மக்களின் பிரச்னைகளை கவனிக்காமல், கார்ப்பரேட் நலன்களுக்காக மத்திய அரசு பாடுபடுவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, திமுக அரசு தனது மோசமான நிர்வாகத்தை மறைக்க ஹிந்தி விவகாரத்தை கையில் எடுத்தாக வைஷ்ணவ் விமர்சித்து இருந்தார்.
News February 28, 2025
EPF வட்டியில் மாற்றமில்லை

2024-25 நிதியாண்டுக்கான வருங்கால வைப்புநிதி (EPFO) வட்டி விகிதம் மாற்றமின்றி 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டு 8.15 சதவீதமாக இருந்த EPFO வட்டி, கடந்த ஆண்டு 0.10% உயர்த்தப்பட்டது. 2015-16ஆம் ஆண்டு 8.8 சதவீதமாக இருந்த EPFO வட்டி படிப்படியாக குறைந்து, தற்போது இந்நிலைக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 7 கோடி பயனர்கள் இந்த EPFO திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர்.