News April 11, 2025

ராணாவை 18 நாள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க முடிவு

image

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை தாக்குதல் குற்றவாளியை 18 நாள் காவலில் வைத்து விசாரிக்க NIA முடிவு செய்துள்ளது. 2008ல் 166 பேரை பலிகொண்ட பயங்கரவாத தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியது யார்? தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்து ராணாவிடம் விசாரிக்கப்படும் என தெரிகிறது. முன்னதாக அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ராணாவை அதிகாரிகள் NIA சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Similar News

News November 28, 2025

நாளை 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

image

டிட்வா புயல் எதிரொலியாக நாளை (நவ.28) நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விழுப்புரம், திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் லீவு விடப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், டிச.3-ம் தேதி கார்த்திகை மகா தீபத்தையொட்டி தி.மலைக்கு உள்ளூர் விடுமுறையாகும்.

News November 28, 2025

கசப்பு தான், ஆனாலும் இது அவ்வளவு நல்லது!

image

பாகற்காய் கசப்பாக இருப்பதால் பெரும்பாலானோர் அதை சாப்பிட மாட்டார்கள். ஆனால் பாகற்காய் ஜூஸை வாரத்திற்கு இருமுறை குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் டாக்டர்கள். *உடலின் ஆற்றலை மேம்படுத்தும் *வலிமையை அதிகரிக்கும் *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் *செரிமானத்திற்கு நல்லது *மலச்சிக்கல் சரியாகும் *வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும். *ஆஸ்துமாவை தடுக்க உதவும்.

News November 28, 2025

கொந்தளித்த பிரித்விராஜ் தாய்

image

பிருத்விராஜின் தாய் மல்லிகா, தனது மகன் வேண்டுமென்றே மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் பிருத்விராஜ் நடித்த ‘விலயாத் புத்தா’ படம் மற்றும் படக்குழுவினர் மீது SM-யில் கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மல்லிகா, ‘என் மகன் மீது திட்டமிட்டே வெறுப்பு பரப்பப்படுகிறது. SM-யில் அவரை அவமதிப்பதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!