News April 11, 2025
ராணாவை 18 நாள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க முடிவு

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை தாக்குதல் குற்றவாளியை 18 நாள் காவலில் வைத்து விசாரிக்க NIA முடிவு செய்துள்ளது. 2008ல் 166 பேரை பலிகொண்ட பயங்கரவாத தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியது யார்? தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்து ராணாவிடம் விசாரிக்கப்படும் என தெரிகிறது. முன்னதாக அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ராணாவை அதிகாரிகள் NIA சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Similar News
News November 19, 2025
2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை: திருமாவளவன்

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார். ஆனால் 2026 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை விசிக திமுகவிடம் வைக்கவில்லை என அவர் இப்போது கூறியுள்ளார். அதேசமயத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையை நாங்கள் கைவிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 19, 2025
விவசாயிகளுக்கு ₹18,000 கோடி நிதி வழக்கும் PM மோடி

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெறும் வேளான் மாநாட்டை PM மோடி தொடங்கி வைக்கிறார். தொடந்து பி.எம். கிசான் திட்டத்தின், 21-வது தவணையான ₹18,000 கோடி உதவித்தொகையை 9 கோடி விவசாயிகளுக்கு வழங்குகிறார். இந்த திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 21,80,204 விவசாயிகள் பயன்பெறுகின்றனர். மேலும், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு PM மோடி விருது வழங்கி கௌரவிக்கிறார்.
News November 19, 2025
இ பாஸ்போர்ட் வாங்க ரெடியா?

புதிய அம்சங்களுடன் சிப் பதிக்கப்பட்ட மின்னணு பாஸ்போர்ட் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதில் ஆர்எப்ஐடி எனப்படும் ரேடியோ அலை அடையாள சிப் மற்றும் ஆன்டனா பொருத்தப்பட்டிருக்கும். இது உங்கள் பயோமெட்ரிக் மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். 2035-க்குள் நாட்டிலுள்ள அனைத்து பாஸ்போர்ட்டுகளையும் மின்னணு முறைக்கு மாற்ற அரசு இலக்கு வைத்துள்ளது.


