News August 6, 2025

அதி நவீன ஏவுகணைகளை களமிறக்க முடிவு

image

ஆபரேஷன் சிந்தூரின் போது நமது பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால், இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விவாதிக்க, பாதுகாப்பு அமைச்சக உயர்மட்ட குழு விரைவில் கூட உள்ளது. இந்தியா – ரஷ்யா கூட்டு தயாரிப்பில் இந்த ஏவுகணைகள் தயாரிக்கப்படுகின்றன.

Similar News

News August 6, 2025

இந்தியாவிற்கு உரிமை உண்டு: ரஷ்யா

image

கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பான அமெரிக்காவின் மிரட்டலுக்கு இடையே இந்தியாவிற்கு ஆதரவாக ரஷ்யா குரல் கொடுத்துள்ளது. எந்தெந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு உண்டு எனவும், அமெரிக்காவின் வரிவிதிப்பு மிரட்டல்கள் சட்ட விரோதமானது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இருப்பினும், 24 மணி நேரத்தில் இந்தியா மீது வரிவிதிப்பேன் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

ஆகஸ்ட் 6: வரலாற்றில் இன்று

image

*1945 – 2ம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியதில் 70,000 பேர் கொல்லப்பட்டனர். *1996 – செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ALH 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது. *2012- நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கோளில் தரையிறங்கியது. *2019- முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்த நாள்.

News August 6, 2025

வெள்ளத்தில் சிக்கி 11 வீரர்கள் மாயம்

image

உத்தரகாண்ட் மேகவெடிப்பால் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில், அங்கிருந்த ராணுவ முகாமும் அடித்து செல்லப்பட்டது. இதில் மீட்புபணிகளுக்குச் சென்ற 11 ராணுவ வீரர்கள் மாயமானதாக அஞ்சப்படுகிறது. அம்மாநிலத்தில் இன்று மதியம் 1:45 மணிக்கு மேகவெடிப்பு பெருவெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை 130 பேரை மீட்டுள்ளதாக அம்மாநில CM புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!