News September 26, 2025
கண்களை ஏமாற்றும் புகைப்படங்கள்

‘கண்ணால் காண்பது பொய்’ என்பது போல சில புகைப்படங்கள் நம்மை ஏமாற்றிவிடும். இப்போது நாம் பார்க்கப்போகும் புகைப்படங்களை ஒருமுறைக்கு இரண்டு முறை உற்றுப்பாருங்கள். முதல்முறை பார்க்கும்போது ஒரு அர்த்தமும், நன்றாக கவனித்து பார்க்கும்போது ‘அட ஏமாந்துட்டோமே’ என தோன்ற வைக்கும். மேலே உள்ள படங்களை ஸ்வைப் செய்து பாருங்கள். இதுபோன்ற புகைப்படங்களை எடுப்பதற்கும் ஒரு திறமை வேணும் பாஸ்.
Similar News
News September 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 470
▶குறள்:
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
▶பொருள்: தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்ட மாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.
News September 26, 2025
நட்புக்கு இலக்கணம் அண்ணாமலை: டிடிவி தினகரன்

அண்ணாமலையின் தூண்டுதலே தனது செயல்பாடுகளுக்கு காரணம் என சிலர் சொல்வது முற்றிலும் தவறு என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நட்புக்கு சிறந்த இலக்கணம் அண்ணாமலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவரே பதில் அளித்துள்ளார் என தெரிவித்த டிடிவி, அவர் எல்லாவற்றையும் கடந்து தனது செயல்பாடுகளால் உயர்ந்த நிலைக்கு வருவார் எனவும் கூறியுள்ளார்.
News September 26, 2025
சித்தராமையா கோரிக்கைக்கு NO சொன்ன விப்ரோ நிறுவனர்

பெங்களூருவில் போக்குவரத்தை கட்டுப்படுத்த விப்ரோ வளாக சாலையில், பொது வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என CM சித்தராமையா வேண்டுகோள் வைத்திருந்தார். ஆனால் CM கோரிக்கையை விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி நிராகரித்தார். விப்ரோ வளாகத்தில் பொதுமக்களை அனுமதிப்பது நீண்டகால தீர்வு அல்ல என அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் போக்குவரத்தை சரிசெய்ய தொழில்நுட்பம் சார்ந்து உதவ தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.