News June 26, 2024

பலி எண்ணிக்கை 60ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 59 பேர் உயிரிழந்திருந்த நிலையில் இன்று காலை கருணாபுரத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் உயிரிழந்தார். மேலும் 150க்கும் மேற்பட்டோர் சேலம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News December 4, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அறிவித்தது அரசு

image

பள்ளிகளுக்கு 12 நாள்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.10 முதல் 23-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை மாணவர்களுக்கு லீவுதான். இதில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளும் அடங்கும். மொத்தமாக 12 நாள்கள் விடுமுறை கிடைப்பதால் அதனை கொண்டாட முன்கூட்டியே திட்டமிடுங்கள். வெளியூர் செல்ல அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. SHARE IT.

News December 4, 2025

ஆறுகள் இல்லாத நாடுகள்

image

ஆறுகள் இல்லாமல் நாடுகளா? என்ன வியப்பாக இருக்கிறதா? ஆம், பல நாடுகளில் ஆறுகள் என்பதே கிடையாது. பெரும்பாலும் பருவகால ஆறுகள் மட்டுமே உள்ளன. அதாவது, மழைக்காலங்களில் நிரம்பும் ஓடைகள். எந்தெந்த நாடுகளில் நிரந்தரமான ஆறுகள் கிடையாது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 4, 2025

திருப்பரங்குன்றத்தில் இன்று தீபம் ஏற்றப்படுமா?

image

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்று இரவு 10:30-க்குள் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் 2-வது முறையாக போலீசார் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி அளிக்கவில்லை. அரசு தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். மலைக்கு செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பதற்றம் நீடிக்கிறது.

error: Content is protected !!