News April 16, 2024

பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு

image

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோஸ்ட்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் இந்த வீரதீர செயலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். நக்சலிஸம் நாட்டின் தடையாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அவர், விரைவில் நமது நாடு நக்சல் இல்லாத நாடாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 29, 2025

சுக்கிரன் பெயர்ச்சி: யோகம் அடிக்கும் 3 ராசிகள்

image

சுக்கிரன் கடந்த ஏப்.26-ம் தேதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியானார். இதனால் அதிக நன்மைகள் பெறும் 3 ராசிகள்: *மகரம்- தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். உறவுகள் வலுப்படும் *கும்பம்: முதலீடுகள் பெருகும். குடும்ப உறவு மேம்படும். அலுவலக அந்தஸ்து உயரும் *மீனம்: திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில், வணிகத்தில் முன்னேற்றம். ஆரோக்கியம் சிறக்கும்.

News April 29, 2025

யார் இந்த பி.ஆர்.கவாய்?

image

SC-ன் புதிய தலைமை நீதிபதியாக B.R.கவாய் பதவியேற்கவுள்ளார். 1960-ல் மகாராஷ்டிராவில் பிறந்த இவர், பம்பாய் ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். பின், 2019-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார். இவரது குடும்பத்தினர் அம்பேத்கரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு புத்த மதத்திற்கு மாறியவர்கள். K.G.பாலகிருஷ்ணனுக்கு அடுத்து தலைமை நீதிபதியாக பதவியேற்கும் 2-வது தலித் கவாய் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 29, 2025

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்

image

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கவாய்-ஐ நியமனம் செய்து குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா மே 13 அன்றுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட பி.ஆர். கவாய் மே 14-ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொள்கிறார். அடுத்த ஆறு மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருக்கப்போகும் அவர், நவ., மாதம் ஓய்வு பெறுவார் என தெரிகிறது.

error: Content is protected !!