News October 2, 2025
POK துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற <<17886965>>போராட்டத்தின்போது<<>> நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் 3 போலீசாரும் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அசாதாரணமான சூழல் நிலவி வருவதால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 2, 2025
எந்த உணவில், என்ன சத்து?

◆வைட்டமின் A- கேரட், கல்லீரல் ◆B1- தானியங்கள், பருப்புகள் ◆B2- பால், முட்டை ◆B3- சிக்கன், வேர்க்கடலை ◆B5- அவகாடோ, முட்டை ◆B6- வாழைப்பழம், சால்மன், உருளை ◆B7- முட்டை, பாதாம் ◆B9- பச்சை காய்கறிகள், பயறு, சிட்ரஸ் ◆B12- மீன், இறைச்சி, பால் பொருள்கள் ◆வைட்டமின் D- மீன், பால். ◆வைட்டமின் K- காலே, ப்ரக்கோலி, சோயாபீன்ஸ் ◆வைட்டமின் E- சூரியகாந்தி விதைகள், பாதாம் ◆வைட்டமின் C- ஆரஞ்சு, கொய்யா. SHARE.
News October 2, 2025
DMK ஆட்சியில் 217 குழந்தைகள் படுகொலை: அன்புமணி

திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரித்துள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் மட்டும் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை எனவும் விமர்சித்துள்ளார்.
News October 2, 2025
தமிழகம் முழுவதும் இன்று மூடல்..

டாஸ்மாக் கடைகள் வழக்கமாக நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும். ஆனால், இன்று காந்தி ஜெயந்தி என்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை பாயும். பார் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.