News January 22, 2025
தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

துருக்கி ஹோட்டலில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76ஆக அதிகரித்துள்ளது. கர்த்தல்கயா ரிசார்ட்டில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தங்கியிருந்தோர் பலர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், 66 பேர் உயிரிழந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அது 76ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News January 10, 2026
கடலூர்: 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

புவனகிரி அடுத்த வத்ராயன்தெத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம் மகன் திவாகர்(15). இவர் நெய்வேலியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் 5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை எடுத்ததால், ஆசிரியர்கள் அவரது பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வர கூறியுள்ளனர். ஆனால் அவரது பெற்றோர் வராததால் மனமுடைந்த மாணவன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
News January 10, 2026
தேர்தலில் புதியவருக்கு வாய்ப்பா? அண்ணாமலை

அரசியல் என்பது ஒரு படத்தின் மூலம் தீர்மானிக்கப்படும் விஷயமல்ல என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேர்தலில் புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என இங்கி, பாங்கி போட்டு பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். திமுகவை அகற்ற வேண்டும் என முடிவெடுத்த பிறகு, ஆட்சியில் யார் அமர்ந்தால் அவர்களுக்கு ஆட்சி கொடுக்க தெரியும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.
News January 10, 2026
மக்கள் நாயகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

சுதந்திர மூச்சுக்காற்றை சுவாசித்த காந்தியவாதி மா.வன்னிக்காளையின் (92) சுவாசம் நின்றுபோனது. உடல் தகனம் செய்யப்பட்டாலும், அவரது கருத்துகளும், போதனைகளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்துக்கொண்டே இருக்கும். ஜனாதிபதியின் தேசிய விருது, தமிழக கவர்னரின் சிறந்த காந்தியவாதி விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அவருக்கு நம்முடைய ஆத்மார்த்தமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.


