News January 20, 2025
மர்மநோயால் அதிகரிக்கும் பலி: குழப்பத்தில் அரசு

J&Kல் உள்ள ரஜௌரி மாவட்டத்தின் பதால் கிராமத்தில் மர்ம நோய் ஒன்று மனிதர்களை வேட்டையாடி வருகிறது. கடந்த டிசம்பரில் முதல் உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அக்கிராமத்தில் வசிக்கும் 3,000 பேரை பரிசோதித்தும், என்ன நோய் என இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நிலைமையை உணர்ந்து மத்திய, மாநில அமைச்சர்களை உள்ளடக்கிய குழுவை அமித்ஷா அமைத்துள்ளார்.
Similar News
News March 17, 2026
தமிழகத்தின் எதிர்காலம் அண்ணாமலை: பவன் கல்யாண்

அண்ணாமலையிடம் அபாரமான ஆற்றல் உள்ளது; ஆனால் அந்த ஆற்றல் முழுமையாக பயன்படுத்தப்படாமல், வெளியே கொண்டு வரப்படாமல் இருப்பதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். அண்ணாமலை மிகவும் உறுதியான ஒரு தலைவர், தமிழகத்திற்கு தற்போது தேவைப்படுவதும் இத்தகைய தலைமைதான் எனக் கூறிய அவர், அண்ணாமலை தனது பொறுப்பை சிறப்பாக கையாண்டால் தமிழகத்தின் எதிர்காலமாக திகழ்வார் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 17, 2026
BREAKING: தங்கம் விலை மேலும் சரிவு!

தங்கம் விலை இன்று(மார்ச் 17) சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹60 குறைந்து ₹14,650-க்கும், 8 கிராம் கொண்ட சவரன் ₹1,17,200-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவால் இந்திய சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து 6-வது நாளாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 17, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <


