News April 15, 2025
வெயிலுக்கு பலி: அறிக்கை அனுப்ப மத்திய அரசு உத்தரவு

வெயிலுக்கு பலியாவோர் குறித்து தினமும் அறிக்கை அனுப்பும்படி, மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதில் நேரிடும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தில் உள்ள IHIP ஆய்வு நடத்தவுள்ளது. இதற்காக அறிக்கை அனுப்பும்படியும், வெயில் நோய்களை எதிர்காெள்ள தயாராக இருக்கும்படியும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
Similar News
News November 27, 2025
₹1.17 கோடியில் காருக்கு பேன்ஸி நம்பர்!

காருக்கு பேன்ஸி நம்பர் வாங்க ஒருவர் ₹1.17 கோடி செலவு செய்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். இது ஹரியானாவில் நடந்துள்ளது. HR88B8888 என்ற பேன்ஸி நம்பரை பெறுவதற்கு அடிப்படை ஏலத் தொகையாக ₹50,000 நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு கடுமையான போட்டி நிலவ, இறுதியாக ஒருவர் ₹1.17 கோடிக்கு ஏலம் கேட்டுள்ளார். இந்த பணத்தில் 4-5 கார்கள் வாங்கலாமே என நெட்டிசன்கள் கூறுகின்றனர். நீங்க பேன்ஸி நம்பர் வாங்கி இருக்கீங்களா?
News November 27, 2025
மீண்டும் முதலிடத்தில் ரோஹித் சர்மா

ICC ODI பேட்டிங் தரவரிசையில் ரோஹித் சர்மா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த முறை நியூசிலாந்து வீரர் சர்ச்சிலிடம் முதலிடத்தை பறிகொடுத்திருந்த ரோஹித், தற்போது 781 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார். நவ.30-ல் தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான ODI போட்டியில் ரோஹித் விளையாடவுள்ளார். இதுவரை SA உடனான 26 ODI போட்டிகளில் 806 ரன்கள் எடுத்துள்ளார்.
News November 27, 2025
மீண்டும் வலுப்பெற்றது.. இன்று மழை வெளுக்கும்

தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு இலங்கை & இந்திய பெருங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று, வட தமிழகம் & ஆந்திர கடலோர பகுதிகள் வழியாக நகரும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.


