News April 15, 2025
வெயிலுக்கு பலி: அறிக்கை அனுப்ப மத்திய அரசு உத்தரவு

வெயிலுக்கு பலியாவோர் குறித்து தினமும் அறிக்கை அனுப்பும்படி, மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதில் நேரிடும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தில் உள்ள IHIP ஆய்வு நடத்தவுள்ளது. இதற்காக அறிக்கை அனுப்பும்படியும், வெயில் நோய்களை எதிர்காெள்ள தயாராக இருக்கும்படியும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
Similar News
News November 20, 2025
7 நாளில் நிதிஷின் CM பதவி காலியான வரலாறு தெரியுமா?

2000-ல் பிரிக்கப்படாத பிஹார் தேர்தலில் 324 இடங்களில் லாலுவின் கூட்டணி 159 தொகுதிகளில் வென்றிருந்தது. மறுபக்கம், நிதிஷ் இடம்பெற்ற NDA கூட்டணி 151-ஐ வென்றது. ஆனால் இரு கூட்டணிகளும் மெஜாரிட்டியை(163) பிடிக்கவில்லை. இருப்பினும், நிதிஷ் குமாரை CM ஆக்கினார் கவர்னர் வினோத். அதன்பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், 7 நாள்களில் CM பதவியை நிதிஷ் ராஜினாமா செய்தார்.
News November 20, 2025
PM கிசான் ₹2,000 வரவில்லையா? இதை செய்யுங்க

PM கிசான் திட்டத்தின் 21-வது தவணையான ₹2000-ஐ விவசாயிகளுக்கு நேற்று PM மோடி விடுவித்தார். ஆனாலும், சில விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இத்திட்டத்தில் இணைந்து பணம் வராமல் இருந்தால் 1800-180-1551 எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது <
News November 20, 2025
ரொனால்டோவுக்கு தங்க சாவி பரிசளித்த டிரம்ப்

ரொனால்டோவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து டிரம்ப் தங்க சாவியை பரிசளித்தார். சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ ஆகியோருடன் டிரம்ப் ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் ரொனால்டோ கலந்து கொண்டார். ரொனால்டோ வெள்ளை மாளிகைக்கு வந்தது மகிழ்ச்சி எனவும், தனது மகன் அவரது தீவிர ரசிகன் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து ரொனால்டோ நன்றி தெரிவித்துள்ளார்.


