News April 15, 2025
வெயிலுக்கு பலி: அறிக்கை அனுப்ப மத்திய அரசு உத்தரவு

வெயிலுக்கு பலியாவோர் குறித்து தினமும் அறிக்கை அனுப்பும்படி, மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதில் நேரிடும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தில் உள்ள IHIP ஆய்வு நடத்தவுள்ளது. இதற்காக அறிக்கை அனுப்பும்படியும், வெயில் நோய்களை எதிர்காெள்ள தயாராக இருக்கும்படியும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
Similar News
News November 16, 2025
மீண்டும் பிஹார் CM ஆகிறாரா நிதிஷ்?

நிதிஷ்குமாரையே பிஹார் CM நாற்காலியில் அமரவைக்க NDA கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவ.19-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் எனவும், இதில் PM மோடி மற்றும் பாஜக CM-கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நிதிஷ் குமார் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை நடக்கவிருப்பதாகவும் பேசப்படுகிறது. மேலும், DCM-மாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
News November 16, 2025
சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிந்தகுஃபா காவல் நிலைய பகுதியின் கீழ் உள்ள பெஜ்ஜி வனப்பகுதியில் நடந்த மோதலில், முக்கிய மாவோயிஸ்ட் தளபதி உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம், இந்த ஆண்டில் இதுவரை சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.
News November 16, 2025
தமிழ் நடிகர் மரணம்.. கதறி துடிக்கும் குடும்பம்

சமூக நீதி கருத்துகளை கலகலப்பான பாணியில் சினிமாவாக அளித்த இயக்குநரும், நடிகருமான வி.சேகர் நேற்றைய முன்தினம் காலமானார். இந்நிலையில், அவரது சொந்த ஊரான தி.மலை, தெய்வாநத்தம் கிராமத்திற்கு சேகரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலை பார்த்த உறவினர்கள், ஊர் மக்கள் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது. சேகரின் பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே, அவரது உடலும் இன்று மதியம் அடக்கம் செய்யப்படவுள்ளது.


