News April 15, 2025

வெயிலுக்கு பலி: அறிக்கை அனுப்ப மத்திய அரசு உத்தரவு

image

வெயிலுக்கு பலியாவோர் குறித்து தினமும் அறிக்கை அனுப்பும்படி, மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதில் நேரிடும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தில் உள்ள IHIP ஆய்வு நடத்தவுள்ளது. இதற்காக அறிக்கை அனுப்பும்படியும், வெயில் நோய்களை எதிர்காெள்ள தயாராக இருக்கும்படியும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

Similar News

News November 21, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 526
▶குறள்:
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.
▶பொருள்: பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.

News November 21, 2025

காஷ்மீர் டைம்ஸில் சோதனை: வெடி பொருள்கள் பறிமுதல்

image

தேச விரோத செயல்களை ஊக்குவிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஜம்முவில் உள்ள ‘காஷ்மீர் டைம்ஸ்’ அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. மாநில புலனாய்வு பிரிவின் சோதனையில் Ak-47 தோட்டாக்கள், பிஸ்டல் தோட்டாக்கள் மற்றும் மூன்று grenade levers உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வெடிபொருட்கள் குறித்து தீவிர விசாரணையும் நடத்தப்படுகிறது. ‘காஷ்மீர் டைம்ஸ்’ நாளிதழ் 1954-ல் இருந்து செயல்பாடுகிறது.

News November 21, 2025

உயிர்களுக்கு ஆபத்தாகவும் SIR பணிகள்: மம்தா பானர்ஜி

image

மேற்கு வங்கத்தில் நடந்து வரும் SIR பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு அம்மாநில CM மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். போதுமான திட்டமிடல் இல்லாததால் அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் SIR சுமையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் BLO தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டிய அவர், உயிர்களுக்கு இந்த பணி அச்சுறுத்தலாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!