News May 23, 2024
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு நேற்றிரவு 9.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் மோடிக்கு இந்தியில் கொலை மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார். அந்த அழைப்பு மத்திய பிரதேசத்தில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய பிரதேசத்துக்கு தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
Similar News
News March 15, 2026
தொகுதிப் பங்கீடு.. EPS எடுத்த முடிவு

அதிமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை EPS அமைத்துள்ளார். அதில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், SP வேலுமணி, வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நாளை முதல் கூட்டணி கட்சிகளுடன் இக்குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. காங்கிரஸ், மமக, கொமதேக, மதிமுக ஆகிய கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 15, 2026
நடிகை த்ரிஷா பிரச்னை முடிவுக்கு வந்தது

<<19332195>> பார்த்திபன் – த்ரிஷா<<>> இடையே பிரச்னை உருவானது அனைவரும் அறிந்ததே. தற்போது, அவர்களுக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வந்திருப்பதாக SM-ல் பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், மும்பையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற த்ரிஷா, பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பதிவிட்டிருப்பதுதான். இதனை பார்த்த நெட்டிசன்கள், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
News March 15, 2026
ஜனநாயகன் படக்குழு செய்தது தவறு: பவன் கல்யாண்

ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்னையில் NDA-வுக்கு தொடர்பில்லை என ஆந்திர DCM பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். சென்சார் விஷயத்தில் ஜனநாயகன் படக்குழு நீதிமன்றத்தை நாடியது தவறு என்றும், நீதிமன்றத்திற்கு செல்லாமல் இருந்திருந்தால் பிரச்னை முடிந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் CBI, CBFC போன்ற அமைப்புகளில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது எனவும் அவர் பேசியுள்ளார்.


