News November 22, 2024

14 நண்பர்களை கொலை செய்த பெண்ணுக்கு மரண தண்டனை!

image

தாய்லாந்தில் நண்பர்கள் 14 பேரை சயனைடு கலந்து கொலை செய்த பெண்ணுக்கு பாங்காக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2023 ஏப்ரலில் சிரிபோர்ன் கான்வாங் என்ற நபர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது செல்போன், பர்ஸ் உள்ளிட்டவையும் திருடப்பட்டன. இதில் அவரது தோழியான சரரத் ரங்சிவுதபோர்ன் மீது போலீசார் சந்தேகமடைந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பணத்துக்காக 14 நண்பர்களைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

Similar News

News August 19, 2025

உயிர் பயம் உள்ளது.. அஜித் மரணத்தில் அடுத்த அதிர்ச்சி

image

கோயில் காவலாளி அஜித் கொல்லப்பட்ட வழக்கில், அவரது தரப்பு வக்கீல் கார்த்திக் ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கோர்ட் உத்தரவிட்டும் போலீஸ் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என தெரிவித்த அவர், வழக்கை நடத்தக் கூடாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்துள்ளார். அச்சுறுத்தும் நபர்கள் குறித்த விவரங்களை கார்த்திக் ராஜா தெரிவித்தால், மேலும் பல தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

News August 19, 2025

சுதர்சன் ரெட்டியை தேர்ந்தெடுத்தது ஏன்?

image

INDIA கூட்டணியின் து.ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சட்டத்துறையில் நல்ல அனுபவம் பெற்றவர். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான இவர், கட்சி சார்பற்றவர். இவர் எந்த தேர்தலிலும் இதுவரை பங்கேற்றதில்லை. இவரை வேட்பாளராக தேர்ந்தெடுத்த கார்கே, ஒரு சிறந்த மனிதரை, நன்கு சட்டம் அறிந்தவரை வேட்பாளராக அறிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

அன்புமணிக்கு தேதி குறித்த ராமதாஸ்; மீண்டும் நோட்டீஸ்

image

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்காத நிலையில், அவர் கட்சியில் இருந்து இன்று நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அன்புமணிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆக.31ம் தேதிக்குள் நேரிலோ அல்லது கடிதத்தின் வாயிலாகவோ அன்புமணி பதிலளிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!