News August 15, 2024
பள்ளி, கல்லூரி மாணவிகள் மரணம்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, மாணவிகள் நெல்லை, காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகே ஆற்றில் குளித்தபோது, இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. அவர்களின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
Similar News
News October 16, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 16, 2025
WTO-வில் இந்தியா மீது புகார் செய்த சீனா

மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி உற்பத்திக்கு இந்தியா வழங்கும் மானியங்கள், உலக வர்த்தக விதிகளுக்கு எதிரானது என சீனா, WTO-வில் புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மானியங்கள் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவித்து, சீன நிறுவனங்களுக்கு நியாயமற்ற போட்டியை உருவாக்குவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இந்த உதவிகளை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ள சீனா, பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
News October 16, 2025
இந்தி திணிப்புக்கு தடையா? TN FACTCHECK விளக்கம்

தமிழ்நாட்டில் கட்டாய இந்தி திணிப்பை தடுக்க, தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப் போவதாக காலையில் <<18012166>>ஒரு தகவல்<<>> வெளியானது. இந்தி பேனர்கள், விளம்பர பலகைகள், திரைப்படங்கள் மற்றும் பாடல்களுக்கு தடைவிதிக்கப் போவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அது முற்றிலும் பொய்யான செய்தி, அப்படியான திட்டம் எதுவும் தமிழக அரசுக்கு இல்லை என TN FACTCHECK தெரிவித்துள்ளது.