News August 15, 2024
பள்ளி, கல்லூரி மாணவிகள் மரணம்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, மாணவிகள் நெல்லை, காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகே ஆற்றில் குளித்தபோது, இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. அவர்களின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
Similar News
News December 7, 2025
திண்டுக்கல்: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

திண்டுக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!
News December 7, 2025
பணம் கொடுத்தார் ஸ்டாலின்.. அனைவரும் இத செய்யுங்க

கொடிநாளையொட்டி சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் CM ஸ்டாலின் நிதியளித்தார். இதுகுறித்து அவரது X பக்கத்தில், மக்கள் பாதுகாப்பாக வாழ உயிரைத் துச்சமாக எண்ணி காவல் காக்கும் படை வீரர்களின் பணி ஈடு இணையற்றது. தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும், அவர்களின் குடும்ப நலுனுக்கும் அனைவரும் கொடிநாள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக PM மோடியும் நிதியளித்துள்ளார்.
News December 7, 2025
சரித்திரம் படைத்தார் அபிஷேக் சர்மா!

ஒரே ஆண்டில் T20-ல் 100 சிக்ஸர்களை கடந்த ஒரே இந்தியர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். சையத் முஷ்டாக் அலி தொடரில், சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 3 சிக்ஸர்களை விளாசி இச்சாதனை படைத்துள்ளார். 2025-ல் T20 கிரிக்கெட்டில், தற்போது வரை அவர் 101 சிக்சர்களை அடித்துள்ளார். இப்போட்டியில் முதலில் பஞ்சாப் 233/6 ரன்களை குவிக்க, சர்வீசஸ் அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


