News August 15, 2024
பள்ளி, கல்லூரி மாணவிகள் மரணம்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, மாணவிகள் நெல்லை, காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகே ஆற்றில் குளித்தபோது, இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. அவர்களின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
Similar News
News November 21, 2025
இறந்த பின்பும் சார்லஸை பழிவாங்கும் டயானா

பாரிஸில் உள்ள கிரெவின் அருங்காட்சியத்தில், பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் மெழுகுச்சிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனின் தற்போதைய அரசரும், EX கணவருமான சார்லஸ், திருமணத்தை மீறிய உறவை ஒப்புக்கொண்ட அன்று, அவரை பழிவாங்க கருப்பு நிற ஆடையை டயானா அணிந்தார். அதே உடையில் தற்போது மெழுகுச்சிலை திறக்கப்பட்டுள்ளது. 1997-ல் பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
News November 21, 2025
கவர்னருக்கு கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: CM

மசோதாக்களை நிறைவேற்ற கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் சட்டம் திருத்தப்படும் வரை ஓயமாட்டோம் என்று CM ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்தால் மாநில அரசுகள் வழக்கு தொடுக்க உரிமை உள்ளது என்பதை <<18340284>>SC<<>> உறுதி செய்துள்ளதாக கூறிய அவர், எந்த அதிகாரமும் அரசியலமைப்பை விட பெரிதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். மாநில உரிமைகளை நிலைநாட்டும் வரை போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 21, 2025
FLASH: வார இறுதியில் சரிவைக் கண்ட சந்தைகள்

பங்குச்சந்தைகள் கடந்த 2 நாள்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், வார இறுதி நாளான இன்று(நவ.21) சரிவைக் கண்டுள்ளன. சென்செக்ஸ் 399 புள்ளிகள் சரிந்து 85,233 புள்ளிகளிலும், நிஃப்டி 128 புள்ளிகள் சரிந்து 26,063 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. ஆனாலும் கூட TCS, Kotak Mahindra, M&M ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2% வரை உயர்ந்துள்ளன.


