News March 20, 2025

மரணம்தான் அவர்கள் முன் உள்ள ஒரே வழி: ப.சி., வேதனை

image

நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 436 பேரில், 183 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் என ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம், அமைதிக்கு இந்த படுகொலைகள் தீர்வாகுமா என வினவியுள்ள அவர், ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போரில், காசா மக்கள்தான் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார். அம்மக்களுக்கு இருக்கும் ஒரே வழி மரணிப்பதுதான் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 22, 2025

இனி மாநில மொழிகளில் தொடர்பு: அமித்ஷா அதிரடி

image

மும்மொழிக்கொள்கை தொடர்பான சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு இந்திய மொழியும் நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் என அமித்ஷா கூறியுள்ளார். ராஜ்யசபாவில் பேசிய அவர், இந்தி எந்த மொழிக்கும் போட்டியில்லை என்றார். மேலும், வரும் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அனைத்து முதல்வர்கள், எம்.பிக்கள், பொதுமக்களுடனான கடிதத் தொடர்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 22, 2025

சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை

image

சென்னையில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வழக்கமாக சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், விடுமுறை அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர், தனியார் என அனைத்துப் பள்ளிகளும் (மார்ச் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை அட்டவணை) அடிப்படையில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2025

தமிழக அரசை கண்டித்து கர்நாடகாவில் பந்த்

image

கர்நாடகாவில் பிறமொழிப் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும், மேகதாது அணை கட்ட விடாமல் தடுக்கும் தமிழக அரசுக்கு கண்டனம், சாம்பாஜி சிலையை அகற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகா – தமிழக எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தமிழக எல்லையான ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!