News August 15, 2024
அலோபதி மருந்துகளால் உயிரிழப்பு: ராம்தேவ்

அலோபதி மருந்துகளை உட்கொள்வதால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழப்பதாக பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார். மருத்துவ சுயசார்பு என்பது இன்னும் கனவாகவே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, அலோபதி மருத்துவம் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதாக உச்சநீதிமன்றத்தில் ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்டார். இந்த வழக்கு கடந்த ஆக. 13ஆம் தேதி முடித்து வைக்கப்பட்டது.
Similar News
News November 5, 2025
U19 உலகக்கோப்பை ரேஸில் டிராவிட் மகன்!

BCCI ஒவ்வொரு ஆண்டும் Challenger Trophy-ஐ நடத்தி வருகிறது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், U19 WC-கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவர். அந்தவகையில், நடப்பு ஆண்டுக்கான Challenger Trophy இன்று தொடங்கியுள்ளது. இதில் Team A, B, C என 3 அணிகள் மோதுகின்றன. இதில், Team C-ல் ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே டிராவிட் இடம்பிடித்துள்ளார். அன்வே விக்கெட் கீப்பர் – டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார்.
News November 5, 2025
ஆண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள்

ஆண்களிடம் எப்போதும் கேட்கக் கூடாத கேள்விகள்: *இத்தன வருசமா வெளியூர்ல இருந்தும், இவ்வளவு தான் சம்பாதிச்சியா? *திருமணத்தை தள்ளி வைக்கும் ஆணிடம், ‘முடி கொட்டிருச்சு. இன்னும் கல்யாணம் ஆகலையா?’ *வேலைத் தேடும் ஆணிடம், ‘நீ எப்போ வேலைக்கு போவ?’ *இன்னும் சொந்த வீடு வாங்கலையா? *கல்யாணம் ஆகி இன்னும் குழந்தை இல்லையா? வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.
News November 5, 2025
ராணுவத்தில் இடஒதுக்கீட்டை கொண்டு வரலாமா?

நாட்டில் <<18200083>>10% உள்ள உயர்சாதியினர்<<>> ராணுவம், அரசு துறைகளில் கோலோச்சுவதாக ராகுல் காந்தி நேற்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்திற்கு எந்த ஒரு மதமோ, சாதியோ கிடையாது, அதை அரசியலாக்கி இடஒதுக்கீட்டை கொண்டு வர முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார். மேலும் சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் அரசியல் நாட்டிற்கு தீங்கு விளைவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


