News April 14, 2024
மரண அடி.. அரை சதம் அடித்த தூபே

வான்கடே மைதானத்தில் அதிரடியாக ஆடிவரும் CSK வீரர் ஷிவம் தூபே அரை சதம் அடித்துள்ளார். மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்த அவர், 28 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 50* ரன்கள் அடித்துள்ளார். ருதுராஜ் 69 ரன்களுடன் களத்தில் உள்ளார். இவர்களது அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணி 15.1 ஓவர்கள் முடிவில் 150/2 ரன்கள் எடுத்துள்ளது. இன்று சிஎஸ்கே எவ்வளவு ரன்கள் எடுக்கும் என நினைக்கிறீர்கள்?
Similar News
News November 20, 2025
தோனி வந்தாலே VIBE தான்: ஜோ ரூட்

‘அரங்கம் அதிரட்டுமே’ என்று தல தோனியை வர்ணித்தால், அதனை நிராகரிப்போர் யாருமில்லை. இவ்வாறு தோனி மஞ்சள் ஜெர்ஸியில் கிரவுண்டுக்குள் வரும்போது மைதானமே வைப் ஆகும், அங்குள்ள மஞ்சள் கடல் (CSK ரசிகர்கள்) அவர் பேரை உச்சரிக்கும் என ஜோ ரூட் புகழ்ந்துள்ளார். எதிரணி மீது தோனி ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது என்றும் அவர் கூறியுள்ளார். தோனி என்றதும் உங்களுக்கு நினைவுக்கு வருவது என்ன?
News November 20, 2025
சற்றுமுன்: விடுமுறை… நாளை முதல் 3 நாள்கள் அரசு அறிவிப்பு

வார விடுமுறையையொட்டி நாளை முதல் நவ.23 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னை,கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சிரமமின்றி ஊருக்குச் செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in இணையதளம், மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். நீங்க டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா?
News November 20, 2025
டெல்லி குண்டுவெடிப்பு.. மேலும் 4 பேர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் 4 பேரை NIA கைது செய்துள்ளது. இதில், 3 பேர் டாக்டர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட 4 பேரும் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க NIA-வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவ.10-ல் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


