News April 8, 2025
கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயம்

கவர்னர் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து SC உத்தரவிட்டுள்ளது. ஒப்புதல் தராமல் நிறுத்தி வைக்கப்படும் மசோதாவை 3 மாதங்களில் கவர்னர் திருப்பி அனுப்ப வேண்டும். திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஒரு மாதத்தில் ஒப்புதல் தர வேண்டும். மசோதாக்களை பொறுத்து, குறைந்தபட்சம் 1 முதல் அதிகபட்சம் 3 மாதத்தில் கட்டாயம் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு ஒப்புதல்

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சுழற்சி முறையில், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். 2025-ல், தமிழகத்தின் ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள 77-வது குடியரசு தின நிகழ்ச்சிக்கு, தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பசுமை மின்சக்தி என்ற தலைப்பிலான தமிழக அரசின் ஊர்திக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
News December 30, 2025
தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு ஒப்புதல்

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சுழற்சி முறையில், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். 2025-ல், தமிழகத்தின் ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள 77-வது குடியரசு தின நிகழ்ச்சிக்கு, தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பசுமை மின்சக்தி என்ற தலைப்பிலான தமிழக அரசின் ஊர்திக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
News December 30, 2025
கரூர் துயரம்.. தமிழக அரசு பரபரப்பு தகவல்

கரூர் விவகாரம் தொடர்பாக CBI தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. கூட்ட நெரிசல் Walkie-talkie மூலம் தவெக தரப்புக்கு கூறப்பட்டதாக கரூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசலுக்கு சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளே காரணமென தவெக வைத்த குற்றச்சாட்டையும் அரசு தரப்பு மறுத்துள்ளதாம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


