News April 8, 2025

கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயம்

image

கவர்னர் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து SC உத்தரவிட்டுள்ளது. ஒப்புதல் தராமல் நிறுத்தி வைக்கப்படும் மசோதாவை 3 மாதங்களில் கவர்னர் திருப்பி அனுப்ப வேண்டும். திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஒரு மாதத்தில் ஒப்புதல் தர வேண்டும். மசோதாக்களை பொறுத்து, குறைந்தபட்சம் 1 முதல் அதிகபட்சம் 3 மாதத்தில் கட்டாயம் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News January 13, 2026

இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழை

image

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

News January 13, 2026

மிகவும் சோம்பேறியான விலங்குகள் PHOTOS

image

உலகில் உள்ள உயிரினங்களில் சில விலங்குகள் மிகவும் சோம்பேறிகளாக, அதாவது மெதுவாக செயல்படுபவையாக உள்ளன. இந்த விலங்குகளின் ஓய்வெடுக்கும் பழக்கம் மற்றும் மெதுவான செயல்பாடு, அவற்றின் ஆற்றலைச் சேமிக்கவும், உணவை ஜீரணிக்கவும், வேட்டையாடலில் இருந்து தப்பிக்கவும் உதவுகின்றன. எந்தெந்த விலங்குகள் மிகவும் சோம்பேறிகள் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.

News January 13, 2026

விஜய் படம் ரீரிலீஸிலும் சிக்கல்

image

சென்சார் பிரச்னையால் ‘ஜன நாயகன்’ படம் தள்ளிப்போனதால் ‘தெறி’ படம் பொங்கல் நாளில் (ஜன.15) ரீ-ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தியேட்டரை திருவிழாவாக்க ரசிகர்கள் தயாராகி வந்தனர். இந்நிலையில், ரிலீஸாகவுள்ள பட (ஜன நாயகன்) தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தெறி பட ரீ-ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

error: Content is protected !!