News April 12, 2025
ஜனாதிபதிக்கு காலக்கெடு: சுப்ரீம் கோர்ட் அதிரடி!

கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவெடுக்காவிடில், மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்யலாம் எனவும் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதிக்கு முதல்முறையாக காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
Similar News
News September 18, 2025
சற்றுமுன்: இன்று ஒரே நாளில் விலை ₹1000 குறைந்தது

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் 2-வது நாளாக குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹1 குறைந்து ₹141-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,41,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹2000, இன்று ₹1000 என 2 நாளில் வெள்ளி விலை ₹3000 குறைந்துள்ளது. வரும் நாள்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையலாம் என்பதால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News September 18, 2025
கூட்டணியா? சற்றுநேரத்தில் மனம் திறக்கிறார் இபிஎஸ்

அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து EPS இன்று விளக்கமளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. OPS, TTV உள்ளிட்டோரை NDA கூட்டணியில் இணைக்க அவர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்தும், செங்கோட்டையன் விவகாரம் குறித்தும் விளக்கம் அளிக்கலாம். அவரின் செய்தியாளர் சந்திப்புக்கு பின்புதான், கூட்டணி குறித்து அதிமுகவின் நிலைபாடு என்ன என்பது தெரியவரும் என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
News September 18, 2025
மீண்டும் தள்ளிப்போகிறதா தனி ஒருவன்-2?

தனி ஒருவன்-2 படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், தனி ஒருவன்-1 ஐ தயாரித்த AGS நிறுவனத்திடமே 2-ம் பாகத்திற்கான கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மோகன்ராஜா. ஆனால் அர்ச்சனா கல்பாத்தியோ, இது சரியான நேரமில்லை என கூறியிருக்கிறார். தனி ஒருவன்-1 வந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், 2ம் பாகம் வருவது டவுட்தான் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.