News April 29, 2025
DC vs KKR.. வாகை சூடப்போவது யார்?

புள்ளிப் பட்டியலில் நான்காமிடத்தில் உள்ள DC, ஏழாம் இடத்திலுள்ள KKR அணியுடன் இன்றிரவு மல்லுக்கட்ட உள்ளது. டெல்லி மைதானத்தில் போட்டி நடைபெற இருப்பது DC அணிக்கு சாதகம். மேலும், அந்த அணி பேட்டிங்கிலும் வலுவாக உள்ளது. அதேநேரத்தில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு கட்டாய வெற்றியை பெற வேண்டிய நிலையில் KKR உள்ளது. இதனால், இன்றைய ஆட்டத்தில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. யார் ஜெயிப்பாங்க?
Similar News
News November 21, 2025
சோழர் சிலையை மோடி தர மறுத்தார்: உதயநிதி

சோழர்களுக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்த PM மோடி, குஜராத் CM ஆக இருந்தபோது, அங்குள்ள மியூசியத்தில் இருந்த ராஜ ராஜ சோழன், அவரது மனைவியின் சிலையை கேட்ட போது தர மறுத்ததாக உதயநிதி கூறியுள்ளார். தமிழ் படிக்க ஆர்வமுள்ள PM, தமிழ் படிக்கும் குழந்தைகளிடம் ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது நியாயமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். முன்பு, தமிழை சிறுவயதிலேயே கற்றிருக்கலாம் என மோடி உருக்கமாக கூறியிருந்தார்.
News November 21, 2025
இந்த உணவுகள் இவ்வளவு விலையா?

உலகில் சில உணவுகள் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் விலை உயர்ந்தவை. அவை மிகவும் அரிதாகவும், குறைந்த அளவில் மட்டுமே கிடைக்கின்றன. அத்துடன், அவற்றின் தரமும் சுவையும் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மேலே, அவை எந்தெந்த உணவுகள், எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பதை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 20, 2025
விஜய் பரப்புரை: இடத்தை இறுதி செய்த தவெக

டிசம்பரில் சேலத்தில் இருந்து விஜய், தனது பரப்புரையை மீண்டும் தொடங்கவுள்ளார். டிச.4-ல் பரப்புரை மேற்கொள்ள போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், மாற்று தேதியை இறுதி செய்யும் பணியில் தவெக ஈடுபட்டுள்ளது. இதனிடையே, சேலம் சீலநாயக்கன்பட்டியில் 10 ஏக்கர் நிலத்தை பரப்புரைக்கு இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் அசம்பாவிதத்தை அடுத்து, பாதுகாப்புடன் பொதுக்கூட்டம் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.


