News April 29, 2025
DC vs KKR.. வாகை சூடப்போவது யார்?

புள்ளிப் பட்டியலில் நான்காமிடத்தில் உள்ள DC, ஏழாம் இடத்திலுள்ள KKR அணியுடன் இன்றிரவு மல்லுக்கட்ட உள்ளது. டெல்லி மைதானத்தில் போட்டி நடைபெற இருப்பது DC அணிக்கு சாதகம். மேலும், அந்த அணி பேட்டிங்கிலும் வலுவாக உள்ளது. அதேநேரத்தில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு கட்டாய வெற்றியை பெற வேண்டிய நிலையில் KKR உள்ளது. இதனால், இன்றைய ஆட்டத்தில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. யார் ஜெயிப்பாங்க?
Similar News
News November 28, 2025
₹40,000 சம்பளத்தில் வேலை.. APPLY NOW!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: B.E/B.Tech, B.Pharm. வயது வரம்பு: 40. தேர்வு முறை: Written Test, Interview, Document Verification. சம்பளம்: ₹42,478. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.25. விருப்பமுள்ளவர்கள் <
News November 28, 2025
ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வது உறுதி: செங்கோட்டையன்

2026 தேர்தலில் தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும், ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வது உறுதி எனவும் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள மேலும் சிலர் தவெகவில் இணைய உள்ளதாக பரவும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, விரைவில் அதற்கான விடை கிடைக்கும் என சூசகமாக பதில் அளித்துள்ளார்.
News November 28, 2025
டிரம்ப் செயலால் 19 நாடுகளுக்கு வந்த புதிய சிக்கல்

வெள்ளை மாளிகை அருகே நடந்த <<18400484>>துப்பாக்கிச்சூட்டை<<>> தொடர்ந்து, ஆப்கானியர்களின் <<18401691>>குடியேற்றத்துக்கு <<>>டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பர்மா, ஈரான், ஹைட்டி, சோமாலியா, சூடான், யேமன், கியூபா உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து வந்தவர்களின் கிரீன் கார்டுகளை முழுமையாக பரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, காயமடைந்த வீரர்களில் ஒருவர் உயிரிழந்ததாக டிரம்ப் அறிவித்துள்ளார்.


