News October 23, 2024
பகல் கனவு காண்கிறார் ஸ்டாலின்: இபிஎஸ்

மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்பதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளதாக விஷமச் செய்தியை திமுக பரப்புவதாகக் குற்றஞ்சாட்டினார். கடந்த தேர்தலை விட திமுக 2024இல் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாகவும், 2026இல் அதிமுக ஆட்சியில் அமருவதை திமுகவால் தடுக்க முடியாது என்றும் சூளுரைத்தார்.
Similar News
News November 19, 2025
ஊத்துக்குளி அருகே வசமாக சிக்கிய மூவர் அதிரடி கைது

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுற்று பகுதியில் கடந்த 17ஆம் தேதி முத்துக்குமார் என்பவரின் செல்போன் திருடப்பட்டது. இது தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் செல்போனை பறித்துச் சென்ற கபிலன் , வெற்றிச்செல்வன் மற்றும் ராகுல் ஆகியோரை கைது செய்து குற்ற சம்பவத்துக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
News November 19, 2025
கள்ளக்குறிச்சி: ரயில் நிலையம் அருகே மீட்கப்பட்ட சடலம்!

ஐவதக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி ஐவதுகுடியிலிருந்து சேலம் வரை செல்லும் ரயில்களில் யாசகம் எடுத்து வருகின்றார்.இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நபர். இவர் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையம் அருகே நேற்று (நவ.18) இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உடலை கைப்பற்றி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
News November 19, 2025
புதுகை: மாநகர மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

SIR சிறப்பு வாக்காளர் திருத்த படிவத்தினை, பூர்த்தி செய்திருந்தாலும், பூர்த்தி செய்யப்படாமல் இருந்தாலும் SIR படிவத்தை (19.11.2025) முதல் (23.11.2025) வரை மதியம் 2 மணி முதல், மாலை 5:45மணி வரை நடைபெறும் சிறப்பு முகாம் அந்த அந்த (வாக்குச்சாவடி நிலையங்களில்) நேரடியாக சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


