News March 27, 2025

தயாளு அம்மாள் ஹாஸ்பிடலில் அனுமதி!

image

CM ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மீண்டும் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 3ஆம் தேதி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று காலை திடீரென வாந்தி எடுத்ததால், பரிசோதனைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை காண CM செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News November 24, 2025

சென்னை-விழுப்புரம் ரயில் பகுதி ரத்து

image

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் எழும்பூர்- விழுப்புரம் பிரிவில் விக்கிரவாண்டி யார்டில் பொறியியல் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, நவம்பர் 24, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் காலை 9:45 க்கு தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் புறப்படும் மின்சார ரயில் (66045) திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திண்டிவனம்-விழுப்புரம் வரை பகுதி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

சென்னை-விழுப்புரம் ரயில் பகுதி ரத்து

image

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் எழும்பூர்- விழுப்புரம் பிரிவில் விக்கிரவாண்டி யார்டில் பொறியியல் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, நவம்பர் 24, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் காலை 9:45 க்கு தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் புறப்படும் மின்சார ரயில் (66045) திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திண்டிவனம்-விழுப்புரம் வரை பகுதி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.23) இரவு 10 மணி முதல் இன்று (நவ.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!