News April 3, 2025

50 வயது தாய்க்குப் பதிலாக SSLC தேர்வு எழுதிய மகள் கைது!

image

தாய்க்குப் பதிலாக 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மகள் போலீஸில் சிக்கியுள்ளார். நாகையில், நேற்று ஆங்கிலத் தேர்வின்போது தனித் தேர்வர்கள் பிரிவில் ஒரு பெண் மாஸ்க் அணிந்தவாறு அமர்ந்துள்ளார். சந்தேகமடைந்த அறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்தபோது இந்த மோசடி அம்பலமாகியுள்ளது. நாகை GHஇல் சமையலராக இருக்கும் 50 வயது சுகந்தியின் பதவி உயர்வுக்காகப் பாசத்தில் மகள் இதை செய்துள்ளார். அன்புக்காக என்றாலும் குற்றம் தானே?

Similar News

News March 8, 2026

TN-ல் NDA கூட்டணி ஆட்சி உறுதி: அமித்ஷா

image

மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் வரும் தேர்தலில் NDA கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என அமித்ஷா தெரிவித்துள்ளார். டேராடூனில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் விரோத அரசுகளை வெளியேற்ற மக்கள் தயாராகி வருவதாக கூறினார். தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என EPS கூறி வரும் நிலையில், அதற்கு முரணாக அமித்ஷா பேசி வருவது பேசுபொருளாகியுள்ளது.

News March 8, 2026

விஜய் மனைவிக்கு திமுகவில் முதல் ஆதரவு வந்தது

image

விஜய் மனைவி சங்கீதாவுக்கு திமுகவில் இருந்து வெளிப்படையாக ஆதரவு வந்துள்ளது. சங்கீதாவிற்கு அவரது கணவர் வீட்டில் வசிக்கும் உரிமையை சட்டம் தந்திருக்கிறது; காவல்துறையின் உதவியுடன் வீட்டிற்குள் நுழையலாம், அதனை கணவரால் (விஜய்) தடுக்க இயலாது என்று திமுக எம்பியான சல்மா கூறியுள்ளார். விமன் ஹெல்ப்லைன் 181 வழியாக சட்ட உதவி கோர அனைத்துப் பெண்களுக்கும் உரிமை உண்டு எனவும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

News March 8, 2026

பெண்களின் அட்வைஸை கொஞ்சம் கேளு ப்ரோ!

image

பெண்களின் ஆலோசனையை கேட்கும் ஆண்களுக்கு சிந்தனை திறன் மேம்படும் என்று ஆய்வு கூறுகிறது. ஆண்களுடன் ஒப்பிடும்போது, ​​பெண்கள் லாஜிக்குடன், அமைதியாக சிந்திக்கிறார்களாம். அதனால், எந்த ஒரு விஷயத்திலும் பெண்கள் தங்கள் கண்ணோட்டத்தில் இருந்து அளிக்கும் ஆலோசனையை கேட்டால், அது ஆண்களுக்கு இன்னும் சிந்தனையை வளர்த்துக் கொள்ள உதவும் என ஆய்வில் சுட்டிக்காட்டுகின்றனர். இனி கேளுங்க பாஸ்!

error: Content is protected !!