News March 18, 2024
திருச்செந்தூரில் ஓபிஎஸ் சாமி தரிசனம்

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் விஸ்வரூப தரிசனத்தில் கலந்து கொண்டார், திருச்செந்தூர் வந்த அவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
Similar News
News November 11, 2025
தூத்துக்குடி: வியாபாரி தீக்குளித்து தற்கொலை

சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (45). இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் உள்ளனர். கடந்த ஓராண்டாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ஊரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டதால் வீட்டிலிருந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், பலத்த காயமடைந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.
News November 11, 2025
தூத்துக்குடி கிறிஸ்த்தவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்த்தவர்களுக்கு அரசு மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டைச்சார்ந்த அனைத்துபிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்த்தவர்களுக்கு பயனடையும் வகையில் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்த்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000- ரூ.60,000 வரை வழங்கப்படுகிறது
News November 10, 2025
தூத்துக்குடி: உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 9443111912 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.


