News April 23, 2025
இருட்டுக்கடை உரிமையாளர் மகள் மீண்டும் பரபரப்பு புகார்

தனது கணவர் பல்ராம் சிங் வெளிநாட்டுக்கு தப்ப வாய்ப்புள்ளதால் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என இருட்டுக்கடை உரிமையாளர் மகள் கனிஷ்கா நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளார். வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமத்தைக் கேட்பதாக ஏற்கனவே அளித்த புகார் மீதான விசாரணைக்கு ஆஜராக, பல்ராம் சிங் 10 நாள்கள் அவகாசம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 23, 2025
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
News April 23, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை & குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
News April 23, 2025
பஹல்காமில் தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். 3 பேர் காயம் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 2 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஒருவர் மட்டும் ICU-ல் அட்மிட் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த முருகானந்தம், அரசு அதிகாரிகள் அவர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாக கூறினார்.