News April 15, 2025
ஈக்வடாரில் மீண்டும் அரியணை ஏறும் டேனியல் நோபோவா..!

ஈக்வடார் அதிபராக டேனியல் நோபோவா மீண்டும் பதவியேற்க உள்ளார். ஏப். 13-ம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், அதிபர் டேனியல் நோபோவாவின் கட்சி 56% வாக்குகளை பெற்றுள்ளது. இடதுசாரி தலைவர் லூயிசா கோன்சலஸை அவர் தோற்கடித்துள்ளார். ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. ஈக்வடாரில்தான் சர்ச்சை சாமியார் நித்தியானாந்தா இருப்பதாக சொல்லப்படுகிறது.
Similar News
News October 20, 2025
அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தவிப்பு: நயினார்

திமுக அரசின் அலட்சியத்தால் தேனி மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேனி பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயர் நகர் குடியிருப்பு பகுதிக்குள் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இதனை சுட்டிக்காட்டிய அவர், பருவமழை துவங்கும்முன் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
News October 20, 2025
லட்சுமி குபேர பூஜைக்கான பலன்களும்.. உகந்த நேரமும்

லட்சுமி குபேர பூஜை என்பது லட்சுமி தேவியையும், குபேரரையும் வேண்டி செய்யும் வழிபாடாகும். தீபாவளியில் இதனை செய்வதால் சங்கடங்களும், காரியத்தடைகளும் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இல்லத்தில் செல்வம் பெருகும். மாலை 3:45 முதல் இரவு 7 மணிவரை லட்சுமி பூஜை செய்ய நல்ல நேரம். தீபாவளி அன்று, குபேர பூஜையை செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள், சிவ – விஷ்ணு கோவில்களில், லட்சுமி தேவியை தரிசிக்கலாம்.
News October 20, 2025
தீபாவளி.. பூஜை செய்ய நல்ல நேரம் எது தெரியுமா?

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீப ஒளி திருநாளில் பூஜை செய்ய உகந்த நேரம் எது என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. பஞ்சாங்கத்தின் படி, காலை 4 மணி முதல் 6 மணிக்குள் எண்ணெய் தேய்த்து நீராடி விட வேண்டும். அதே போல, காலை 9:10 மணி முதல் 10:20 மணிக்குள் பூஜை செய்வது வீட்டிற்கு நற்பலன்களை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த பயனுள்ள பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.