News August 31, 2024

மத்திய அரசால் கல்வி பாதிப்பு: அன்பில் மகேஸ்

image

ராதாபுரம் வட்டம் கூட்டப்புளி மீனவ கிராமத்தில் ரூ.48.50 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்கு தளம் அமைக்கும் கட்டுமான பணி தொடக்க விழா இன்று(ஆக.,31) நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி‌ கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மத்திய அரசால் தமிழகத்தில் பல லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

Similar News

News September 9, 2025

துணை ஜனாதிபதிக்கு நயினார் வாழ்த்து

image

பாஜக மாநில தலைவர் நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்ட அறிக்கையில், துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று 15ஆவது குடியரசுத் துணைத் தலைவராக விரைவில் பதவியேற்று மாநிலங்களவையை வழிநடத்த இருக்கும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பைத் தமிழர் அலங்கரிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.

News September 9, 2025

நெல்லையில் ஆங்காங்கே பிச்சை எடுக்கும் சிறுவர் சிறுமிகள்

image

நெல்லை மாநகர பகுதியில் சமீபகாலமாக சிறுவர், சிறுமிகள் ஆங்காங்கே பிச்சை எடுக்கும் அவலம் அதிகரித்துள்ளது. எனவே இந்த சிறுவர்கள் குறித்தான விவரங்களை சேகரித்து இவர்களை கல்வி பயில மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதனை விரைந்து தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

News September 9, 2025

காணொளியில் மாவட்ட செயலாளர் கலந்துரையாடல்

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று (செப்.9) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் இரா. ஆவுடையப்பன் திருநெல்வேலி திமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்.

error: Content is protected !!