News August 18, 2024
குழாய் பதிக்கும் பணியை நாளை தொடங்கி வைக்கிறார் அப்பாவு

நெல்லை மாவட்டத்தில் 831 கிராமங்களுக்கு ரூ.605 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கவுள்ளது. இதனை முன்னிட்டு ஏர்வாடி விளக்கிலிருந்து லெவிஞ்சிபுரம் வரை 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது. இந்த குழாய் பதிக்கும் பணியை நாளை சபாநாயகர் அப்பாவு வள்ளியூர் சந்திப்பு அருகில் தொடங்கி வைக்கிறார். எம்பி, எம்எல்ஏ கலந்து கொள்கின்றனர்.
Similar News
News December 1, 2025
நெல்லை: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

நெல்லை மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
திருநெல்வேலி (ம) – 0462-250761
பாளையங்கோட்டை – 9445000381
அம்பாசமுத்திரம் – 9445000386
நாங்குநேரி – 9445000387
இராதாபுரம் – 9445000388
மானூர் – 9445796458
சேரன்மகாதேவி – 9445796459
திசையன்விளை – 9499937025
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News December 1, 2025
நெல்லை: நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளி

தச்சநல்லூர் தேநீர் குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பேச்சிமுத்து (42). இவரை முன் பகை காரணமாக நேற்று தச்சநல்லூரை சேர்ந்த சங்கர் (38) என்பவர் தச்சநல்லூர் சாய்பாபா கோவில் அருகே வழிமறித்து அருவாளால் வெட்டிக் கொல்ல முயன்றார். அவர் தப்பியோடி சென்று அளித்த புகாரின் படி தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து சங்கரை கைது செய்தனர்.
News December 1, 2025
நெல்லை: மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

அம்பை அருகே மேல ஏர்மால்புரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). விவசாய தொழிலாளியான இவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள தனது உறவினர் தோட்டத்தில் மின் பழுதை சரி செய்தபோது ஸ்டே கம்பியை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து அம்பாசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை.


