News March 17, 2025
அப்பாவு மாறவே இல்லை: EPS

சபாநாயகர் அப்பாவு மீண்டும் பழையபடியே செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இன்று காலை அவையில் பேசிய EPS, எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சு நேரலை செய்யப்படுவதில்லை என்று புகார் தெரிவித்திருந்தார். ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த பின்னரும் கூட சபாநாயகர், இன்றைய தனது பேச்சை நேரலை செய்யவில்லை என்று EPS சாடியுள்ளார்.
Similar News
News March 17, 2025
சதுர்கிரஹி யோகம்: அடித்து தூக்க போகும் 3 ராசிகள்

சூரியன், புதன், சுக்கிரன், ராகு என 4 கிரகங்கள் தற்போது மீன ராசியில் சஞ்சரித்துள்ளன. இதனால் சதுர்கிரஹி யோகம் உருவாகியுள்ளது. இது தனுசு, கடகம், விருச்சிகம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு யோகத்தை அள்ளித் தர போகிறது. நேர்மறை எண்ணங்கள் உருவாகும். பதவி உயர்வு கிடைக்கும். தன்னம்பிக்கை மேலோங்கும். புதிய பதவி மற்றும் கெளரவம் கிடைக்கும். சட்ட சிக்கல்கள் தீரும். தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
News March 17, 2025
திருப்பதி கோயில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…!

ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்லத் தோன்றும் கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில். அங்கு ஜூனில் நடைபெறும் சுப்ரபாதம், அஷ்டதல பாத பத்மாராதனை உள்ளிட்ட சேவைகளுக்கான தரிசன டிக்கெட் பெற நாளை (மார்ச் 18) முதல் மார்ச் 20 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பக்தர்கள் டிக்கெட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 17, 2025
ரூ.21,370 கோடி சொத்துகள் பறிமுதல்… அம்மாடியோவ்!

2024-2025ம் நிதியாண்டில் ஏப்ரல்- டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் ரூ.21,370 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்திடம் உள்ள புள்ளி விவரங்களில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 மாதங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட நபர்களுக்கு ரூ.4,198 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.