News March 17, 2025
அப்பாவு மாறவே இல்லை: EPS

சபாநாயகர் அப்பாவு மீண்டும் பழையபடியே செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இன்று காலை அவையில் பேசிய EPS, எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சு நேரலை செய்யப்படுவதில்லை என்று புகார் தெரிவித்திருந்தார். ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த பின்னரும் கூட சபாநாயகர், இன்றைய தனது பேச்சை நேரலை செய்யவில்லை என்று EPS சாடியுள்ளார்.
Similar News
News March 17, 2025
விந்தணுக்களை அதிகரிக்க இந்த காய்கறிதான் பெஸ்ட்!

கேரட் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. ஆண்களுக்கு விந்தணுக்களின் அளவு, தரத்தை அதிகரிப்பதிலும் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறதாம். கேரட்டில் கரோட்டினாய்டு அதிகமாக இருப்பதால், விந்தணு குறைபாட்டை போக்க பெரிய அளவில் உதவுகிறதாம். கருமுட்டையை அடையும் அளவிலான சக்தியை விந்தணுவுக்கு கேரட் கொடுப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இனிமேல் தினமும் உணவில் கேரட்டை சேர்த்துக்கோங்கப்பா!
News March 17, 2025
Laptop திட்டத்தை நிறுத்தியதே நீங்க தான்: CM ஸ்டாலின் தாக்கு

அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டதாக சட்டப்பேரவையில் இபிஎஸ் குற்றஞ்சாட்டினார். இதற்கு விளக்கம் அளித்த CM ஸ்டாலின், ‘மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை, நீங்களே நிறுத்திவிட்டுதான் சென்றீர்கள்’ என பதிலளித்தார். திட்டத்தை சரிசெய்து மீண்டும் மடிக்கணினி வழங்குவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளதாகவும் CM தெரிவித்தார்.
News March 17, 2025
ரேஷன் அரிசியில் இனி 10% மட்டுமே குருணை

ரேஷன் அரிசியில் 25% வரை குருணை கலக்க முன்பு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், அந்த அளவை 15% குறைத்து இனி 10% மட்டுமே ரேஷன் அரிசியில் குருணை கலக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ரேஷனில் விநியோகிக்கப்படும் அரிசியில் அதிக குருணை இருப்பதாகவும், தரமில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், மத்திய அரசின் இம்முடிவினால் இனி ரேஷனில் தரமான நல்ல அரிசி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.