News March 16, 2024

தி.மலை: பங்கு மாத பௌர்ணமி கிரிவலத்திற்கு உகந்த நேரம்

image

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி பங்குனி மாத பௌர்ணமி மார்ச் 24ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 10.54க்கு தொடங்கி, மார்ச் 25ம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 12.55 மணிக்கு பௌர்ணமி முடிவடைகிறது. எனவே இந்த நேரங்களில் கிரிவலம் செல்லலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News December 6, 2025

தி.மலை: ரயில்வேயில் ரூ. 42,000 வரை சம்பளத்தில் வேலை!

image

RITES இரயில்வே நிறுவனம், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து, வரும் டிச.25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.23,340 – ரூ.42,478 வரை சம்பளம் வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 6, 2025

தி.மலை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News December 6, 2025

தி.மலை: சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி

image

செங்கம் அருகே கொட்டகுளம் கிராமத்தை சேர்ந்த குப்பன் (55) கூலி வேலைக்காக தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் செல்ல வந்தார். அவரை பேருந்தில் ஏற்ற மகன் இரண்டு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்தபோது, திருவண்ணாமலை திசையிலிருந்து வந்த கார் மோதியது. இதில் குப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகனும் இரண்டு பேரப்பிள்ளைகளும் காயமடைந்து செங்கம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!