News October 5, 2025
கனமழை வெளுத்து வாங்கும்

நடப்பாண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என கணித்துள்ளது. இந்நிலையில், அரபிக் கடலில் உருவான ’சக்தி’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில், இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது.
Similar News
News October 5, 2025
அதிகாலையில் பிரபல தமிழ் நடிகை வீட்டில் பரபரப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதிகாலையில், காவல்கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, உடனே வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் சொர்ணமால்யா வீட்டிற்கு விரைந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே, CM, த்ரிஷா உள்ளிட்டோர் வீட்டிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
News October 5, 2025
SC-ல் மேல்முறையீடு செய்த தவெக நிர்வாகிகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தலைமறைவாக உள்ள N.ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை மதுரை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மனுவை விரைந்து விசாரிக்க கோரி நாளை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவும் உள்ளனர்.
News October 5, 2025
கரூர் விவகாரம்: இன்றே விசாரணையை தொடங்கும் SIT

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நீதிமன்றம் அமைத்திருந்தது. இந்நிலையில், வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க், நாமக்கல் எஸ்பி விமலா, எஸ்பி சியாமளாதேவி ஆகியோர் இடம்பெற்றுள்ள இக்குழு கரூருக்கு விரைந்துள்ளது. இன்றே விசாரணையை தொடங்கும் இவர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவதோடு, சிசிடிவிகளை ஆராயவும் திட்டமிட்டுள்ளனர்.