News December 19, 2024
ருத்ர தாண்டவம் ஆடிய ‘சீடோ’ புயல்

இந்தியப் பெருங்கடலில் உருவான ‘சீடோ’ புயல் தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் பகுதிகளில் 1000க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியிருக்கிறது. மிக தீவிர புயலாக இருந்த சீடோ, அப்பகுதியில் இருந்த தீவுக்கூட்டங்கள், மொசாம்பிக்யூ ஆகிய நாடுகளில் கோர தாண்டவம் ஆடியிருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
Similar News
News September 7, 2025
தமிழர்களின் கவனிப்பு: CM ஸ்டாலின் எமோஷனல்

முதலீடுகளை ஈர்க்க CM ஸ்டாலின் மேற்கொண்ட ஜெர்மனி & UK பயணம் நிறைவடைந்தது. இப்பயணத்தின் போது வெளிநாடு வாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பை பற்றி குறிப்பிட்ட அவர், இத்தனை நாளும் தன்னை சகோதரனாய் எண்ணி கவனித்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், அளவில்லா அன்பு பொழிந்த தமிழ் மக்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.
News September 7, 2025
வீட்டு மின் இணைப்பு.. அரசு புதிய அறிவிப்பு

முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், விற்பனை பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, கோர்ட் தீர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும். வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு காத்திருப்போருக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News September 7, 2025
ஆப்கன் அமைச்சரின் இந்திய பயணம் ரத்து

ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகியின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காரணம், அனைத்து முன்னணி தலிபான் தலைவர்களுக்கும் எதிராக ஐ.நா.,வின் பாதுகாப்பு கவுன்சில் பயணத் தடை விதித்துள்ளது. எனவே, முத்தாகியின் இந்திய பயணத்துக்கு விலக்கு அளிக்கப்படவில்லை.