News October 27, 2025

Montha புயல்: 13 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

Montha புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், விழுப்புரம், கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, நீலகிரி, தி.மலை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

Similar News

News October 27, 2025

TN அரசிடம் திருமா வைத்த கோரிக்கை

image

ஆசிய கபடி போட்டியில் தங்கம் வென்றதால் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற கார்த்திகாவுக்கும், அபினேஷுக்கும் தலா ₹25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆனால், குகேஷுக்கு ₹5 கோடி, கார்த்திகாவுக்கு ₹25 லட்சம் தானா என திமுக அரசை எதிர்நோக்கி கேள்விகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், அவர்களுக்கான ஊக்கத்தொகையை ₹1 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என விசிக சார்பில் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

News October 27, 2025

தங்க நகை: இப்படியொரு கட்டுப்பாடா?

image

கல்யாண வீடுகள்ல பெண்கள் நிறைய தங்க நகைகள் அணிவதற்கு இந்த கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கத்தில் கம்​மல், மூக்​குத்​தி, தாலி அணியலாம். ஆனால் ஆடம்பரமாக அதிக அளவு நகைகள் போட்டுட்டு வந்தா ₹50 ஆயிரம் ஃபைன். ஏன் தெரியுமா? பணக்காரங்கள பார்த்து ஏழைகளும் நகைகள் சேர்க்க கடன் வாங்கி சிரமப்படுவதால இப்படி ஒரு கட்டுப்பாடாம். உத்தராகண்ட்ல இருக்குற இந்த கந்​தார் கிராமத்த இந்தியாவே வியந்து பாக்குது.

News October 27, 2025

சற்றுமுன்: கண்ணீருடன் விஜய்

image

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கண்ணீருடன் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் 33 குடும்பங்களை தனித்தனியாக விஜய் சந்தித்து வரும் நிலையில், அவருடன் கட்சி நிர்வாகிகள் யாரும் இல்லை. மேலும் கூடுதல் நிதியுதவி செய்ய ஏதுவாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சுயதொழில், சொந்த வீடு, கடன் பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகளை எழுத்துபூர்வமாகவும் பெறுகிறார்.

error: Content is protected !!