News October 23, 2024
இன்று உருவாகிறது ‘டானா’ புயல்

மத்திய கிழக்கு, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ‘டானா’ புயலாக உருவாகிறது. தொடர்ந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவு ஒடிசா, மேற்கு வங்கம் கடற்கரையை அடையும் இந்த புயல், பூரி – சாகர் தீவுகளுக்கும் இடையே 25ம் தேதி அதிகாலை தீவிர புயலாக கரையை கடக்க உள்ளது. இதனால், 25ம் தேதி அதிகாலை அதிகபட்சமாக 120KM வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
எறும்புகளுக்கு சர்க்கரை நோய் வரலையே எப்படி?

சொல்லப்போனால் மனிதர்களை விட எறும்புகள்தான் அதிகமாக சர்க்கரை சாப்பிடுகின்றன. ஆனால் அவற்றுக்கு சர்க்கரை நோய் வருவதே இல்லை. காரணம், அவற்றின் உடல் அமைப்பு சர்க்கரையை உடனுக்குடன் குளுக்கோஸாக மாற்றி எனர்ஜியாக கன்வர்ட் செய்கிறது. இந்த எனர்ஜியை பயன்படுத்தியே எறும்புகள் எப்போதும் சுறுசுறுப்பாக உழைக்கின்றன. தேவைக்கேற்ப சர்க்கரை எடுத்துக்கொண்டு சுறுசுறுப்பாக இயங்கினால் நமக்கும் பிரச்னை இல்லை. SHARE.
News December 5, 2025
டெல்லி வரை சென்றும் வாய் திறக்காத விஜய்

சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தீவிரமாகியுள்ளது திருப்பரங்குன்றம் விவகாரம். ஆனால், இதுவரை விஜய்யின் தவெக தரப்பில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படாமல் இருப்பது பேசுபொருளாகியுள்ளது. பொதுக்கூட்ட பணியில் பிஸியாக இருக்கும் தவெக தலைமை, தமிழகத்தின் தற்போதைய சமூக பிரச்னைக்கு குரல் கொடுக்குமா என்பதே விர்ச்சுவல் வாரியர்ஸின் எதிர்பார்ப்பாக உள்ளது. உங்கள் கருத்து என்ன?
News December 5, 2025
புடினுக்கான விருந்தில் சசி தரூர் IN.. ராகுல் OUT!

ஜனாதிபதி இல்லத்தில் இன்று இரவு ரஷ்ய அதிபருக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க ராகுல் காந்தி மற்றும் கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாம். மாறாக, காங்., MP சசிதரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திக்கும் மரபு, பாஜக ஆட்சியில் மீறப்படுவதாக ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார்.


